ஈரானின் 8 நகரங்களில் உள்ள ராணுவ மற்றும் அணுசக்தி மையங்களை குறைவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயர் அதிகாரிகள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை, ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலால், ஈரானின் முக்கிய இராணுவ மற்றும் அணுசக்தி தளங்கள் அழிவடைந்துள்ளன. இஸ்ரேல் மேற்கொண்ட இந்த தாக்குதலுக்கு “ஆபரேஷன் ரைசிங் லயன்” என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில், ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) தளபதி ஹொசைன் சலாமி, ஆயுதப்படைகள் மத்திய தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கோலம் அலி ரஷீ, மூத்த அணு விஞ்ஞானிகள் முகமது மெஹ்தி தெஹ்ரான்சி மற்றும் ஃபெரிடூன் அப்பாசி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலியாகினர்.
தெஹ்ரானில் அதிகாலை 3.00 மணிக்கு தொடங்கிய தாக்குதல்கள், நாடு முழுவதும் பல மாகாணங்களில் தொடர்ந்தன. பல ராணுவ தலைமையகங்கள், அணுசக்தி வசதிகள், மற்றும் IRGC தளங்கள் இந்த தாக்குதலில் இலக்காக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பின்னர், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேலின் உயிர்வாழ்வை சீர்குலைக்கும் ஈரானின் முயற்சிகளை முறியடிக்க இந்த ரைசிங் லயன் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் இது தொடரும்,” என்றார்.
அதே நேரம் இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான பதிலடி அளிக்கப்படும் என ஈரானின் முன்னாள் அதிபர் அயதுல்லா அலி காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். “தீய மற்றும் இரத்தக்கறை படிந்த சியோனிச ஆட்சி, இன்று நம் மண்ணில் குற்றம் புரிந்துள்ளது. இது பதிலுக்கு கடுமையான தண்டனையை எதிர்நோக்க வேண்டும்,” என அவர் கூறியுள்ளார். உலக நாடுகள் இந்த தாக்குதலை மிகுந்த கவலையுடன் நோக்கி வருகின்றன.
Read more: ஈரான் – இஸ்ரேல் பதற்றம்!. பயணத்தை தவிருங்கள்; விழிப்புடன் இருங்கள்!. இந்திய தூதரகம் அறிவுறுத்தல்!.