அனுமனின் பாதம் பட்ட மலை.. ஆஞ்சநேயர் கிரிவலம் செல்லும் அதிசய மலைக்கோவில்.. சென்னையில் எங்க இருக்கு தெரியுமா..?

anjeeneya temple

திருவண்ணமாலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வது போல் ஆஞ்சநேயரே ஒவ்வொரு பவுர்ணமிக்கும் கிரிவலம் செல்லும் கோயில் ஒன்று இருக்கிறது என என்றால் கண்டிப்பாக ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. உண்மை தான். அப்படி ஒரு கோவில் சென்னையில் உள்ளது.


சென்னை கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது புதுப்பாக்கம். இங்கு அழகிய கஜகிரி என்ற மலை மீது அமைந்துள்ளது வீர ஆஞ்சநேயர் கோவில். 108 படிகள் ஏறிச் சென்றால் மலை மீது அற்புதமாக, அமைதியாக அருள் செய்யும் ஆஞ்சநேயரை தரிசிக்க முடியும். ஆன்மிக அதிர்வலைகளை உணர வைத்து, மனதிற்கு அமைதியை தரும் பசுமையான இந்த ஆஞ்சநேயர் கோவில் ஹனுமன் பக்தர்களுக்கு மிக முக்கியமான தலம் என்றே சொல்லப்படுகிறது. இங்கு அடிக்கடி வந்து வழிபட்டு சென்றால் நம்முடைய கர்மவினைகள் அனைத்து அகலும் என சொல்லப்படுகிறது.

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படும் திருவிடந்தை ஸ்ரீ நித்ய கல்யாண பெருமாள் கோவில் பாரி வேட்டையின் போது இங்குள்ள ஆஞ்சநேயர் அங்கு கொண்ட செல்லப்பட்டு, உற்சவங்கள் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த மலைக்கோவிலில் கையில் சஞ்ஜீவி மலையை ஏந்திய படி, வடக்கு நோக்கி நாபிக்கமலத்தில் தாமரையுடன், அனுமன் வலது காலை பூமியில் ஊன்றியும், இடது காலை பறப்பதற்கு தயாராக இருப்பது போலவும் இருக்கும் நிலையில் அபய முத்திரை காட்டிய நிலையில் அருள் செய்கிறார்.

அதே போல் வாலில் மணி கட்டி, வாலை பின்புறமாக தலைக்கு மேல் உயர்த்தி, பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கோலத்திலும் காட்டி தருகிறார். ஆஞ்சநேயர் சன்னதிக்கு எதிரில் ஸ்ரீ ராமர், சீதா தேவி, லட்சுமணரின் சன்னதி உள்ளது. அங்கும் ராமரின் பாதத்திற்கு அமர்ந்த நிலையில் அனுமன் காட்சி தருகிறார்.

இங்கு பக்தர்கள் வெண்ணெய் காப்பு, சாற்றியும், வெற்றிலை மாலை அணிவித்தும் ஆஞ்சநேயரை வழிபடுகிறார்கள். இவரை வழிபடுவதால் தீய சக்திகளின் தொல்லைகள், நோய்கள், மன அழுத்தம், கவலை, திருமண தடைகள், பயம் போன்றவை நீங்கும். இங்கு வந்து பக்தர்கள் என்ன வேண்டிக் கொண்டாலும் நடக்கும் என சொல்லப்படுகிறது.

அமாவாசை நாளில் புதிய செங்கல் வாங்கி, அதில் ராம நாமம் எழுதி, அதை தலையில் வைத்துபடி, படியேறி வந்து ஆஞ்சநேயரை வழிபட்டால் விரைவில் வீடு கட்டும் யோகம் அமையும் என சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் எதுவுமே நடக்கவில்லை என்பவர்கள் இங்கு வந்து வழிபட்டு சென்றால் நன்மைகள் நடக்கும் என சொல்லப்படுகிறது. பவுர்ணமி தோறும் இங்கு ஆஞ்சநேயர் கிரிவலம் வருவதாக நம்பிக்கை. அந்த சமயத்தில் நாமும் கிரிவலம் வந்து வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும் என்பது நம்பிக்கை.

Read more: தீயாய் பரவும் கொரோனா.. கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் பலி..!! மீண்டும் லாக்டவுன்..?

Next Post

ஷாக்!. மலட்டுத்தன்மை அதிகரிக்க Wi-Fi தான் காரணமாம்!. ஜப்பான் ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Mon Jun 16 , 2025
நவீன வாழ்க்கை முறையில், வைஃபை நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ, எல்லா இடங்களிலும் வைஃபை இருப்பது மிகவும் முக்கியம். இந்தநிலையில், மலட்டுத்தன்மை அதிகரிக்க வைஃபையும் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. Wi-Fiக்கும் குழந்தையின்மைக்கும் என்ன தொடர்பு? ரவுட்டர்கள், மடிக்கணினிகள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் போன்ற வைஃபை சாதனங்கள் 2.45 GHz அதிர்வெண்ணில் RF-EMR ஐ வெளியிடுகின்றன. இவை அயனியாக்கம் […]
wifi infertility 11zon

You May Like