தூள்…! 5 நிமிடங்களில் டிஜிட்டல் முறையில் காப்பீட்டு பாலிசி..! தொடங்கிய விபத்து காப்பீட்டு திட்ட முகாம்..!

money 2025 e1749486445504

இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம் அஞ்சலகங்களில் விபத்து காப்பீட்டு திட்ட முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கி, பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, மக்களிடையே காப்பீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், “பாதுகாப்பு 360” என்ற புதிய பொது காப்பீட்டு இயக்கம் 30.06.2025 வரை செயல்படுத்துகிறது. இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோள், எதிர்பாராத இழப்புகள், சேதங்களிலிருந்து மக்களுக்கு நிதி ரீதியாக பாதுகாப்பு வழங்கும் வகையில் பொது காப்பீடு குறித்த அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.


ஆண்டொண்டிற்கு வெறும் ரூ.520 / ரூ.555 பீரீமியத்தில், ரூ.10 லட்சம் மற்றும் ரூ. 755 பீரீமியத்தில், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சாமானிய மக்களுக்கு விபத்துக் காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அஞ்சலகங்கள் (தபால்காரர்/ கிராமிய அஞ்சல் ஊழியர்கள்) மூலம், மிகக்குறைந்த பிரீமியம் தொகையுடன் கூடிய இந்த விபத்துக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம். விண்ணப்பபடிவம், அடையாள/முகவரி சான்றின் நகல்கள் போன்ற எவ்வித காகித பயன்பாடுமின்றி, தபால்காரர் கொண்டுவரும் ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக்சாதனத்தை பயன்படுத்தி, 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இதற்கான காப்பீட்டு பாலிசி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: மகிழ்ச்சி…! 30 நாட்களுக்குள் அனைத்து ஓய்வூதிய பலன்கள்…! அரசு அதிரடி உத்தரவு…!

Vignesh

Next Post

மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு.. அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கம்..!! அடுத்த பரபரப்பு..

Tue Jun 17 , 2025
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை வந்த விமானத்தில் எஞ்சின் கோளாறு ஏற்பட்டதால் கொல்கத்தாவில் தரையிறக்கம். செவ்வாய்க்கிழமை அதிகாலை சான் பிரான்சிஸ்கோவிலிருந்து மும்பைக்குச் செல்ல திட்டமிடப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI180, தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொல்கத்தாவில் பயணிகளை அவசரமாக இறக்க விட்டது. தகவலின்படி, இந்த விமானம் நெதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தை நள்ளிரவு 12:45 மணிக்கு வந்தடைந்ததும், இடது எஞ்சினில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக […]
Mumbai via Kolkata

You May Like