மருத்துவத் துறையின் சீரழிவுக்கு திமுக அரசு தான்…! அன்புமணி பகீர் குற்றச்சாட்டு…!

anbumani 2025

அரசு மருத்துவமனைகளில் தூய்மைப் பணியாளர்களே மருத்துவம் அளிக்கும் அவலம் நிலவி வருகிறது. மருத்துவத் துறையின் சீரழிவுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.


இது குறித்து அவர் தனது அறிக்கையில்; திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் காலில் அடிபட்டு காயத்துடன் வந்த நோயாளி ஒருவருக்கு அங்கு பணியாற்றும் துப்புரவுப் பணியாளர் ஒருவரே மருத்துவம் அளித்த காட்சி காணொலியாக வலம் வருவது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் எத்தகைய அவல நிலையில் உள்ளன என்பதற்கு இந்த காணொலி தான் சான்று ஆகும்.

காயமடைந்த நோயாளிக்கு தூய்மைப் பணியாளர் மருத்துவம் அளிக்கவில்லை; ஏற்கனவே போடப்பட்ட கட்டை மட்டும் தான் பிரித்தார் என மருத்துவமனை தரப்பில் அளித்துள்ள விளக்கம் அபத்தமானது. நோயாளிகளூக்கு கட்டை பிரிப்பது தூய்மைப் பணியாளரின் வேலை அல்ல. அந்தப் பணியை பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர் தான் மேற்கொள்ள வேண்டும். தூய்மைப் பணிகளை மேற்கொண்ட பணியாளர் ஒருவர், அப்படியே நோயாளிக்கு மருத்துவம் அளித்தால் சம்பந்தப்பட்ட நோயாளிக்கு நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்துகள் உள்ளன. இவற்றை அறிந்திருந்தும் ஒரு நோயாளிக்கு தூய்மைப்பணியாளர் மூலம் சிகிச்சையளிக்கச் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுவது தான் சிக்கலுக்குக் காரணம் ஆகும். மருத்துவப் பணியாளர்களை போதிய அளவில் நியமிக்க வேண்டிய தமிழக அரசு, அதைச் செய்யாமல் வீண் விளம்பரங்களிலும், பொய்ப்பரப்புரைகளிலும் மட்டும் தான் ஈடுபட்டு வருகிறது. ஒரு காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்னுதாரணமாக இருந்த தமிழக மருத்துவத்துறை இப்போது சீரழிவுப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். உயிர்க்காக்கும் துறையில் அலட்சியமாக செயல்படுவதை விடுத்து மருத்துவத் துறையில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Read more: மகிழ்ச்சி…! 30 நாட்களுக்குள் அனைத்து ஓய்வூதிய பலன்கள்…! அரசு அதிரடி உத்தரவு…!

Vignesh

Next Post

திடீர் மரணம்!. பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வீட்டில் சோகம்!. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Tue Jun 17 , 2025
கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் மாமா நேற்று காலமானார். அவருக்கு வயது (72). பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தமிழன் படத்தில் அறிமுகமானாலும் பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார். பாலிவுட்டைத் தொடர்ந்து அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு பெண் குழந்தையும் உள்ளது. அங்கு ஹாலிவுட் படங்களில் […]
priyanka chopra uncle die 11zon

You May Like