அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை வந்த விமானத்தில் எஞ்சின் கோளாறு ஏற்பட்டதால் கொல்கத்தாவில் தரையிறக்கம்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை சான் பிரான்சிஸ்கோவிலிருந்து மும்பைக்குச் செல்ல திட்டமிடப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI180, தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொல்கத்தாவில் பயணிகளை அவசரமாக இறக்க விட்டது. தகவலின்படி, இந்த விமானம் நெதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தை நள்ளிரவு 12:45 மணிக்கு வந்தடைந்ததும், இடது எஞ்சினில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக மும்பைக்கு புறப்படுவதை தாமதப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
காலை 5:20 மணிக்கு, பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறங்குமாறு அறிவிக்கப்பட்டது. விமானக் காப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கேப்டன் விளக்கினார். ஜூன் 12 ஆம் தேதி மதியம் 1.39 மணிக்கு சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் மேகனிநகரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மோதி விபத்துக்குள்ளனது.
இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேரும், தரையில் இருந்த 29 பேரும் உயிரிழந்தனர். சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மிக மோசமான விபத்தாக இது பார்க்கப்படுகிறது. இந்த கோர விபத்தின் அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீண்டு வராத நிலையில் தற்போது இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து ஏற்படுகின்ற இத்தகைய சம்பவங்கள், ஏர் இந்தியா விமானப் பாதுகாப்பு மீதான கேள்விகளை தீவிரமாக எழுப்புகின்றன.
Read more: திடீர் மரணம்!. பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வீட்டில் சோகம்!. அதிர்ச்சியில் ரசிகர்கள்!