மத்திய கிழக்கு பகுதியில் தொடரும் ஈரான்-இஸ்ரேல் மோதலின் பின்னணியில், இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) முக்கிய நடவடிக்கையாக 24×7 கட்டுப்பாட்டு அறையை டெல்லியில் செவ்வாயன்று (ஜூன் 17) நிறுவியுள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது X பக்கத்தில், “ஈரான் மற்றும் இஸ்ரேலில் நடைபெறும் நிகழ்வுகளை கருத்தில் கொண்டு கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாட்டு அறை தொடர்பு விவரங்கள்:
Toll-free: 1800-11-8797
எண்கள்: +91-11-23012113, 23014104, 23017905
WhatsApp: +91-9968291988
மின்னஞ்சல்: situationroom@mea.gov.in
இந்திய தூதரகம் – ஈரான் (தெஹ்ரான்) அவசர உதவி எண்கள்:
அழைப்பிற்கு:
- +98 9128109115
- +98 9128109109
வாட்ஸ்அப்பிற்கு:
- +98 901044557
- +98 9015993320
- +91 8086871709
தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம், இந்திய மாணவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சமூகத் தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இது போன்ற சூழ்நிலையில், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், தூதரகத்தின் சமூக ஊடகங்களை தொடர்ந்து கண்காணிக்கவும் இந்திய குடிமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது” என தூதரகம் தெரிவித்துள்ளது.
மோதலின் பின்னணி: இஸ்ரேல், வெள்ளிக்கிழமை இரவு ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட இடங்களில் பெரும் தாக்குதலை நடத்தியது. இதில் பதிலடி நடவடிக்கையாக ஈரான் ஏராளமான ட்ரோன்கள், ஏவுகணைகளை ஏவியது. மூத்த இராணுவ அதிகாரிகள், அணு விஞ்ஞானிகள் பலியாகினர். முக்கிய அணுசக்தி உள்கட்டமைப்புகள் சேதம் அடைந்தஹ்டு.
மோதல் மோசமாகும் நிலையில், பல மத்திய கிழக்கு நாடுகள் வான்வெளியை மூடியுள்ளன. விமான நிலையங்களில் சேவைகள் குறைக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கியுள்ளனர். இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வெளியுறவுத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் தகவல்களுக்கு மேற்கண்ட எண்கள், வாட்ஸ்அப், மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தலாம்.
Read more: வங்கி வாடிக்கையாளர்களின் ஒப்புதலை டிஜிட்டல் மயமாக்கும் TRAI..!! ஸ்பேம் அழைப்புகளுக்கு Full Stop..!!