போர் பதற்றம்!. ஈரானில் வாட்ஸ் அப் பயன்படுத்த திடீர் தடை!. என்ன காரணம்?

iran whats app ban

இஸ்ரேலுடன் நடந்து கொண்டிருக்கும் போர் காரணமாக, ஈரான் அரசு தனது குடிமக்களை வாட்ஸ்அப் பயன்பாட்டை தங்களது மொபைல் போன்களிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.


கடந்த வெள்ளியன்று ஈரானின் அணு சக்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல், சமீபத்திய பதற்றங்களின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. ’Operation Rising lion’ என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, ’True promise 3’ என்ற பெயரில் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.

இதனிடையே, இஸ்ரேலும் ஈரானும் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்தி சண்டையை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.ஆனால், பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள ஈரான், இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தே தீருவோம் என கத்தார் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிடம் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

மேற்கு ஆசிய நாடுகளுக்கு இடையேயான பதற்றத்திற்கு மத்தியில், ஈரானில் இருந்து இந்திய மாணவர்களை ஆர்மீனியா வழியாக வெளியேற்றும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தநிலையில், இஸ்ரேலுடன் நடைபெற்று வரும் தொடர்ச்சியான மோதலின் சூழலில், ஈரான் அரசு தனது குடிமக்களை தங்களது மொபைல் போன்கள் மற்றும் பிற சாதனங்களில் இருந்து வாட்ஸ்அப்பை (WhatsApp) நீக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

ஈரானிய அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்திகளின்படி, வாட்ஸ்அப் பயன்பாடு பயனர்களின் தரவுகளை சேகரித்து, இஸ்ரேலுடன் பகிர்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த வாட்ஸ்அப், அவற்றை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.இவை தவறான குற்றச்சாட்டுகள் எனவும், இவை சேவையை தடை செய்யும் ஒரு முன்னிலையைக் கொடுக்கக்கூடும் என்பதால் பெரும் கவலையை ஏற்படுத்துகின்றன என்றும் தெரிவித்துள்ளது. “பயனர்களுக்கு தகவல் அனுப்புவதற்கும், தொடர்பில் இருப்பதற்கும் இந்த நேரத்தில் நாங்கள் மிக முக்கியமான சேவையளிக்கிறோம். இத்தகைய தவறான தகவல்கள், அந்த சேவையை இடைமறிக்க ஏதுவாக இருக்கக் கூடும்,” என்று வாட்ஸ்அப் கவலை தெரிவித்துள்ளது.

மேலும், பயனர் தனியுரிமையை பாதுகாக்க, தாங்கள் end-to-end encryption என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம் என்பதை வாட்ஸ்அப் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இதன்மூலம் “பயனர்கள் அனுப்பும் செய்திகளின் உள்ளடக்கங்களை எங்களுக்கே பார்க்க முடியாது. பயனர்களின் தனியுரிமை எங்களுக்கே மிக முக்கியமானது,” என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

மேலும், பயனர்களின் துல்லியமான இருப்பிடங்களை (exact locations) பின்தொடர்வதில்லை. யார் யாருடன் செய்தியாடுகிறார்கள் என்பதற்கான பதிவுகளை (message metadata) வைக்கவில்லை. பயனர்களுக்கு இடையே பரிமாறப்படும் தனிப்பட்ட செய்திகளை கண்காணிப்பதில்லை என்றும் வாட்ஸ் அப் நிறுவனம் தெளிவுப்படுத்தியுள்ளது. குறிப்பாக, “எந்த அரசுக்கும், நிறுவனத்திற்கும், பயனர்களின் தகவல்களை நாங்கள் பகிரவில்லை” என்று வாட்ஸ் அப் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Readmore: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.7.5 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சை…!

KOKILA

Next Post

OYO-வில் கள்ள காதலனுடன் உல்லாசம்.. போலீசாருடன் என்ட்ரி கொடுத்த கணவன்..!! ஜன்னல் வழியே எஸ்கேப் ஆன மனைவி..!! - வைரல் வீடியோ

Wed Jun 18 , 2025
காதலனுடன் ஹோட்டலில் தங்கியிருந்த ஒரு பெண், திடீரென கணவரும் மாமியாரும் போலீசாருடன் வந்ததை பார்த்ததும் ஹோட்டல் சுவரில் இருந்து குதிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக வைரலாகி வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தின் பராத் பகுதியில் உள்ள ஒரு OYO ஹோட்டலில் அந்த பெண் தனது கள்ள காதலனுடன் தங்கியிருந்தார் என கூறப்படுகிறது. தகவல் அறிந்த பெண்ணின் கணவர் குடும்பம் போலீசாருடன் ஹோட்டல் அறைக்கு வந்தனர். […]
up affair

You May Like