இந்த சின்ன பையன் எனக்கு வில்லனா..? வேண்டாம் ஆள மாத்துங்க.. தயங்கிய ரஜினிகாந்த்.. போட்டு உடைத்த நெப்போலியன்..!!

rajini neppolian 1

எஜமான் திரைப்படம் கடந்த 1993ஆம் ஆண்டு வெளியானது. ஆர்.வி.உதயகுமார் இயக்கியிருந்த அந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா, ஐஸ்வர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இந்த படத்தில் வில்லனாக நெப்போலியன் நடித்திருக்கிறார். இந்த நிலையில் ரஜினி குறித்து நெப்போலியன் அளித்த பழைய பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.


அவர் அளித்த பேட்டியில், “எஜமான் பட சமயத்தில் எல்லாம் நான் வளர்ந்துவரும் நடிகராக இருந்தேன். அந்தப் படத்தில் என்னை வில்லனாக்க இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் முடிவு செய்தார். ஆனால் ரஜினியோ அவரிடம், ‘நெப்போலியன் சின்ன வயதா இருக்கிறாரே. இந்தப் பையனை வில்லனாக போட்டால் சரியாக வருமா?.. மெச்சூர்டா இருக்கக்கூடிய ராதா ரவியை வில்லனாக போடலாம். அப்படி இல்லையென்றால் கன்னட நடிகர் பிரபாகரை வில்லனாக போடலாமே என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் இயக்குநர் உதயகுமாரோ, ‘எம்ஜிஆரைவிடவும் நம்பியார் இளைய வயதுக்காரர்தான். ஆனால் எம்ஜிஆருக்கு நம்பியார் வில்லனாக, அப்பாவாக, மாமனராக நடித்திருக்கிறார். அதே மாதிரிதான் நெப்போலியன் உங்களைவிட சின்ன வயதாக இருந்தாலும் அவர் உங்கள் வயதுக்கு ஏற்ற மாதிரி கதையில் தோன்றும். அதனால் நன்றாக இருக்கும். அவரையே கமிட் செய்யலாம்’ என சொல்லியிருக்கிறார். அதேபோல் படத்தில்கூட உன்னைவிட ஒரு வயது நான் மூத்தவன் என்று வசனமும் வரும்

ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு அப்படி கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. படத்தில் ரஜினிதான் கடைசியாக டப்பிங் பேசினார். பேசி முடித்தவுடன் எனக்கு ஃபோன் செய்தார். அப்போது அவர் என்னிடம், ‘நெப்போலியன் ரொம்ப பிரமாதமாக நடித்திருக்கிறீர்கள். நான்கூட நீங்கள் சரியாக வருவீர்களா என்று ஆரம்பத்தில் யோசித்தேன். ஆனால் உங்கள் கதாபாத்திரமும், நடிப்பும் மிக அருமையாக இருந்தது. உங்களுக்கு பெரிய அளவில் பெயர் கிடைக்கும் என்று கூறினார். உடனே நான் சார் அது நீங்கள் கொடுத்த வாய்ப்புதானே சார்’ என்று சொன்னேன்” என்றார்.

Read more: பாஸ்ட் டேக்கில் ரூ.3000 ரீஜார்ஜ் செய்தால் போதும்.. வருடம் முழுக்க பயணிக்கலாம்..!! ஆகஸ்ட் 15 முதல் அமல்..

Next Post

நடந்து முடிந்த உடனே குளிக்கிறீங்களா..? இதனால் ஏற்படும் பக்க விளைவுகளை தெரிஞ்சுக்கோங்க..

Wed Jun 18 , 2025
இப்போதெல்லாம், உடற்பயிற்சி ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதை பலர் உணர்ந்து வருகிறார்கள். அதனால்தான் காலையில் எழுந்தவுடன் நடைபயிற்சி அல்லது ஜாகிங் செய்ய விரும்புகிறார்கள். முடிந்தால், மாலையிலும் நடைபயிற்சி செய்கிறார்கள். ஆனால் நடைபயிற்சி செய்த உடனேயே குளிக்கலாமா? இல்லையா? இது பலருக்கு இருக்கும் ஒரு சந்தேகம். இதைப் பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம். வெயிலில் நடந்து சென்று வீடு திரும்பிய பிறகு, தோல் சூடாகிறது. இந்த நிலையில், நடைப்பயணத்தை […]
bothing

You May Like