கழிவை அள்ளும் தங்க கைகள்.. பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாத அவலம்..!! கருணை காட்டுமா அரசு..?

Cleaning

பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் தூய்மை பணியில் ஈடுபட்ட, தூய்மை பணியாளர்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்


தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களை கண்டு களித்து வருகின்றனர்

அந்த வகையில் சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் சுற்றுலா தளங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள சென்னை பெருநகர மாநகராட்சி சார்பாக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இரவும் பகலமாக தூய்மை பணியில் ஈடுபட்டு, தூய்மைப்படுத்தி வருகின்றனர்

குறிப்பாக பருவ மழை காலங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் மற்றும் கழிவு நீர் இணைந்து, சாலையில் தேங்கும் அவலம் என்பது சென்னை மாநகரில் தொடர்ந்து நீடித்து வருகிறது, அந்த கழிவுகளை தூய்மை படுத்தும் பணி என்பது தூய்மை பணியாளர்களுக்கு மிகவும் சவாலாக இருந்து வருகிறது

இந்தத் தூய்மை பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படுவதில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது அந்த வகையில், பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவி வருகிறது

அந்த வகையில் சென்னை காமராஜர் சாலையில், கழிவுநீர் முழுவதும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால், அதனை தூய்மைப்படுத்தும் பணியில் ஐந்திற்கும் மேற்பட்ட தூய்மையாளர்கள் ஈடுபட்டனர், அப்போது அவர்கள் எந்த பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் கழிவுநீர்களை கைகளால் அப்புறப்படுத்தி வந்தனர்

குறிப்பாக தூய்மை பணியாளர்களுக்கு கைக்கவசம், முகக்கவசம், சேஃப்டி ஷூ, தொப்பி உள்ளிட்ட எந்த வகையான பாதுகாப்பு கவசங்களும் இல்லாமல் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இது குறித்து தூய்மை பணியாளர் ஒருவர் கூறுகையில், பாதுகாப்பு கவசங்கள் அதிகாரிகளிடம் கேட்டால் இதோ தருகிறோம் நாளை தருகிறோம் என சொல்கிறார்கள் தவிர கொடுக்க மாட்டார்கள் என தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இறுதியாக கொரோனா காலகட்டத்தில் தான் பாதுகாப்பு கவசங்கள் கொடுக்கப்பட்டனர், அதற்குப் பிறகு எந்த ஒரு கவசங்களையும் கொடுக்கவில்லை.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதிலும் அளிப்பதில்லை, கடந்த இரண்டு வருடங்களாக பாதுகாப்பு கவசங்கள் இல்லாததால் நாங்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறோம் என, தூய்மை பணியாளர்கள் வருத்தம் தெரிவித்தனர். இதனால் தோல் அரிப்பு, இரும்பல், சளி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல் நலக் குறைவுகள் ஏற்பட்டு தான் வருவதாகவும் தூய்மை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Read more: கலாநிதி Vs தயாநிதி : “குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை..” சன் டிவி விளக்கம்..

Next Post

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் கொளுத்தும்..!! - வானிலை ஆய்வு மையம்

Fri Jun 20 , 2025
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வந்த நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தொடங்கி ஜூன்.26ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை […]
tempreture

You May Like