பறவை மோதியதால் டெல்லி-புனே ஏர் இந்தியா விமானம் திரும்பும் பயணத்தை ரத்து செய்தது.
இன்று புனேவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பறவை மோதியதால், விமான நிறுவனம் அதன் திரும்பும் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து பொறியியல் குழு விரிவான சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், புனேவில் தரையிறங்கிய பிறகு பறவை மோதியது கண்டறியப்பட்டதாகவும் ஏர் இந்தியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் “ஜூன் 20 அன்று புனேவிலிருந்து டெல்லிக்கு இயக்க திட்டமிடப்பட்டிருந்த AI2470 விமானம், புனேவில் பாதுகாப்பாக தரையிறங்கிய பிறகு பறவை மோதியது கண்டறியப்பட்டதால் ரத்து செய்யப்பட்டுள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு தங்குமிடம் வழங்குவது உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. ரத்து செய்தல் அல்லது இலவச அட்டவணையை மாற்றியமைத்ததற்கான பணம் திரும்ப வழங்கப்படும் என்றும், பயணிகளை டெல்லிக்கு பறக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இன்று “மேம்பட்ட பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு காரணங்களுக்காக” ஏர் இந்தியா குறைந்தது 8 விமானங்களை ரத்து செய்தது.
ஜூன் 12 அன்று, ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளது. மேகனி நகர் பகுதியில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியின் விடுதி வளாகத்தில் மோதியதில் விமானம் வெடித்து சிதறியது.. இந்த விமானம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானதில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடந்த 30 ஆண்டுகளில் நடந்த மோசமான விபத்தாக இது பார்க்கப்படுகிறது. நாட்டையே உலுக்கிய இந்த விபத்துக்கு பிறகு பல விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகளை ஏற்படுவதும், விமானம் அவசரமாக தரையிறக்கப்படுவதும் அல்லது ரத்து செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.
Read More : புதிய விதி.. இனி புதிய பான் கார்டுக்கு ஆதார் கட்டாயம்.. எப்போது முதல்?