அரியர் மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!

college admission 2025

துணை தேர்வில் அரியர் வைத்துள்ள பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும். இன்று மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்.


கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாலிடெக்னிக் டிப்ளமா தேர்வில் இறுதி செமஸ்டர் மற்றும் துணை தேர்வை எழுதிய மாணவர்கள் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் அரியர் வைத்துள்ளனர். அம்மாணவர்கள் உயர்கல்வி பயிலவும் வேலைவாய்ப்புக்கு செல்ல முடியாமல் இருக்கும் சூழ்நிலையை கருத்தில்கொண்டும் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்து ஜூன், ஜூலையில் ஒரு சிறப்பு துணை தேர்வு நடத்துவதன் மூலம் அரியர் பாடங்களை எழுத வாய்ப்பு வழங்குமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

முதல்வரின் அறிவுரையின் பேரில், அம்மாணவர்களுக்கு தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்காக ஜூன், ஜூலையில் சிறப்பு துணை தேர்வு நடத்தப்படும். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு செய்ய இன்று கடைசி நாள். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு ஜூன் 25-ம் தேதி பதிவேற்றம் செய்யப்படும். பாடத்தேர்வு ஜூன் 30 முதல் ஜூலை 16 வரை நடைபெறும்.

செய்முறைத் தேர்வுகள் ஜூலை 17 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்படும். தேர்வு முடிவுகள் ஜூலை 30-ம் தேதி வெளியிடப்படும். சிறப்பு துணைத் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.30.தேர்வு கட்டணம் (ஒரு பாடத்துக்கு) ரூ.65. அரியர் வைத்துள்ள மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Read more: இந்திரா காந்தியின் இளைய மகன் முதல் விஜய் ரூபானி வரை!. விமான விபத்துகளில் உயிரிழந்த 7 பிரபல இந்திய பிரபலங்கள்!

Vignesh

Next Post

கொசுவைப் போல உருவாக்கப்பட்ட ட்ரோன்!. சீனா இராணுவத்தில் புதிய புரட்சி!. எதிர்கால போர்களை மாற்றுமா?

Mon Jun 23 , 2025
இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில், சீனா விஞ்ஞானிகள் மிகச் சிறிய, கொசு அளவிலான ட்ரோன்களை ராணுவ பயன்பாட்டுக்காக உருவாக்கியுள்ளனர். இதுதொடர்பாக South China Morning Post (SCMP) செய்தி நிறுவனத்தின்படி, இந்த மிகச்சிறிய கொசு அளவிலான ட்ரோன் (micro drone) சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹூனான் மாகாணத்தில், தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு (National University of Defence Technology – NUDT) உட்பட்ட ஒரு […]
mosquito drone china

You May Like