ஐஏஎஸ் அதிகாரிகள் 55 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 9 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி..
* வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளராக ஷிபா பிரபாக சதீஷ் நியமனம்.
* CMDA உறுப்பினர் செயலாளராக பிரகாஷ் நியமனம்.
* நிதித்துறை சிறப்புச் செயலாளராக வெங்கடேஷ் நியமனம்.
* உயர்கல்வித்துறைச் செயலாளராக சங்கர் நியமனம்.
* மனித வள மேலாண்மைத்துறை செயலாளராக சமய மூர்த்தி நியமனம்
* போக்குவரத்துத்துறை சிறப்பு செயலாளர் லில்லி நியமனம்.
* நகராட்சி நிர்வாகத்துறை சிறப்பு செயலாளர் கணேஷ் நியமனம்.
* ராஜேந்திர ரத்னூ மத்திய அரசு பணியில் இருந்து முதன்மைச் செயலாளராக நியமனம்.
* சென்னை மாநகராட்சியின் சுகாதாரப்பிரிவு இணை ஆணையராக ஜெயசீலம் ஐஏஎஸ் நியமனம்.
மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்:
* திருப்பூர், பெரம்பூர், மதுரை, நாமக்கல், திருச்சி, ஈரோடு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் பணியிடைமாற்றம
* டாக்டர் நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ் திருப்பூர் மாவட்ட ஆட்சியராகவும், சரவணன் திருச்சி மாவட்ட ஆட்சியராகவும் நியமனம்.
* செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பெரம்பலூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம்.
* சென்னை மா நகராசி துணை ஆணையர் பிரவீன் குமார், மதுரை மாவட்ட ஆட்சியராக நியமனம்.
* ஈரோடு மாவட்ட ஆட்சியராக கந்தசாமி, நாமக்கல் மாவட்ட ஆட்சியராக துர்கா மூர்த்தி நியமனம்.
Read more: அகவிலைப்படி 4% உயர்வு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு செம குட்நியூஸ்.. சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்..?