BREAKING| 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!! – தமிழக அரசு அதிரடி உத்தரவு

tn govt 20251 1

ஐஏஎஸ் அதிகாரிகள் 55 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 9 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி..


* வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளராக ஷிபா பிரபாக சதீஷ் நியமனம்.

* CMDA உறுப்பினர் செயலாளராக பிரகாஷ் நியமனம்.

* நிதித்துறை சிறப்புச் செயலாளராக வெங்கடேஷ் நியமனம்.

* உயர்கல்வித்துறைச் செயலாளராக சங்கர் நியமனம்.

* மனித வள மேலாண்மைத்துறை செயலாளராக சமய மூர்த்தி நியமனம்

* போக்குவரத்துத்துறை சிறப்பு செயலாளர் லில்லி நியமனம்.

* நகராட்சி நிர்வாகத்துறை சிறப்பு செயலாளர் கணேஷ் நியமனம்.

* ராஜேந்திர ரத்னூ மத்திய அரசு பணியில் இருந்து முதன்மைச் செயலாளராக நியமனம்.

* சென்னை மாநகராட்சியின் சுகாதாரப்பிரிவு இணை ஆணையராக ஜெயசீலம் ஐஏஎஸ் நியமனம்.

மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்:

* திருப்பூர், பெரம்பூர், மதுரை, நாமக்கல், திருச்சி, ஈரோடு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் பணியிடைமாற்றம

* டாக்டர் நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ் திருப்பூர் மாவட்ட ஆட்சியராகவும், சரவணன் திருச்சி மாவட்ட ஆட்சியராகவும் நியமனம்.

* செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பெரம்பலூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம்.

* சென்னை மா நகராசி துணை ஆணையர் பிரவீன் குமார், மதுரை மாவட்ட ஆட்சியராக நியமனம்.

* ஈரோடு மாவட்ட ஆட்சியராக கந்தசாமி, நாமக்கல் மாவட்ட ஆட்சியராக துர்கா மூர்த்தி நியமனம்.

Read more: அகவிலைப்படி 4% உயர்வு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு செம குட்நியூஸ்.. சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்..?

Next Post

விவசாயிகள் கவனத்திற்கு.. ரூ. 2,000 பணம் பெற.. உடனே இந்த 4 பணிகளை முடிக்கவும்..

Mon Jun 23 , 2025
நாடு முழுவதும் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM கிசான்) திட்டத்தின் 20வது தவணைக்காக காத்திருக்கிறார்கள். இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6,000 அதாவது 3 தவணைகளாக ரூ.2,000 கிடைக்கும். மேலும் பணம் ஒவ்வொரு 4 மாதங்களுக்கும் நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும். இருப்பினும், அடுத்த தவணை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாததால், 20வது தவணை […]
farmers 1

You May Like