சபரிமலையில் இந்த ஆண்டு ஆடி மாத பிறப்புக்கும் முன்பாக வரும் ஜூலை 11 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை மாளிகைபுரம் கோயிலின் இடது புறத்தில் அமைந்திருந்த நவக்கிரக மண்டபத்தை மற்றொரு இடத்தில் மாற்ற வேண்டும் என தேவப்பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய நவக்கிரக கோயில் ஒரு தனி இடத்தில் கட்டப்படத் தொடங்கியது. தற்போது அதன் கட்டுமானம் நிறைவடைந்து, பிரதிஷ்டை நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கின்றன.
இதற்கான பிரதிஷ்டை ஜூலை 13- ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக சபரிமலை நடை 11-ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் சுத்திக்கிரியைகள் நடைபெறும். ஜூலை 12- ம் தேதி பிரதிஷ்டைக்கு முன்னோடியான பூஜைகள் நடைபெறும். 13 -அதிகாலை கணபதி ஹோமம், உஷ பூஜை, மரப்பாணி ஆகிய சடங்குகளுக்கு பின்னர் காலை 11:00 முதல் 12:00 மணிக்குள் நவக்கிரக கோயில் பிரதிஷ்டை நடைபெறும்.
அன்று இரவு, பிரதிஷ்டை விழா முடிவடைந்ததும், சபரிமலை நடை அடைக்கப்படும். ஜூலை 11 முதல் 13 வரை சபரிமலையில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக, ஆன்லைன் முன்பதிவு வசதி நேற்று (ஜூன் 23) முதல் தொடங்கப்பட்டு, தற்காலிக நடைத் திறப்பை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Read more: பரபரப்பு..! ஈரான், இஸ்ரேல் போர் உச்சம்… சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து…!