நவக்கிரக பிரதிஷ்டை: சபரிமலையில் ஜூலை 11 ஆம் தேதி நடை திறப்பு..!! – ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

sabanimala 2

சபரிமலையில் இந்த ஆண்டு ஆடி மாத பிறப்புக்கும் முன்பாக வரும் ஜூலை 11 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது.


சபரிமலை மாளிகைபுரம் கோயிலின் இடது புறத்தில் அமைந்திருந்த நவக்கிரக மண்டபத்தை மற்றொரு இடத்தில் மாற்ற வேண்டும் என தேவப்பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய நவக்கிரக கோயில் ஒரு தனி இடத்தில் கட்டப்படத் தொடங்கியது. தற்போது அதன் கட்டுமானம் நிறைவடைந்து, பிரதிஷ்டை நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கின்றன.

இதற்கான பிரதிஷ்டை ஜூலை 13- ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக சபரிமலை நடை 11-ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் சுத்திக்கிரியைகள் நடைபெறும். ஜூலை 12- ம் தேதி பிரதிஷ்டைக்கு முன்னோடியான பூஜைகள் நடைபெறும். 13 -அதிகாலை கணபதி ஹோமம், உஷ பூஜை, மரப்பாணி ஆகிய சடங்குகளுக்கு பின்னர் காலை 11:00 முதல் 12:00 மணிக்குள் நவக்கிரக கோயில் பிரதிஷ்டை நடைபெறும்.

அன்று இரவு, பிரதிஷ்டை விழா முடிவடைந்ததும், சபரிமலை நடை அடைக்கப்படும். ஜூலை 11 முதல் 13 வரை சபரிமலையில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக, ஆன்லைன் முன்பதிவு வசதி நேற்று (ஜூன் 23) முதல் தொடங்கப்பட்டு, தற்காலிக நடைத் திறப்பை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Read more: பரபரப்பு..! ஈரான், இஸ்ரேல் போர் உச்சம்… சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து…!

Next Post

அனுமதி இல்லாமல் வீடுகளை வழிபாட்டு கூடமாக பயன்படுத்த முடியாது!. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

Tue Jun 24 , 2025
அரசின் முறையான அனுமதி இல்லாமல் வீடுகளை வழிபாட்டு கூடங்களாக (prayer halls) மாற்றி பயன்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் கோடவாசல் பகுதியைச் சேர்ந்த ஆயர் எல். ஜோசப் வில்சன் என்பவர், 2024-ஆம் ஆண்டு, தம்முடைய வீட்டில் ஜெபக் கூட்டங்கள் நடத்துவதை தடுக்கும் வகையில் அந்த வீட்டின் மீது மாவட்ட தாசில்தார் சீல் வைக்க உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். மனுவை […]
chennai high court 11zon

You May Like