உலகளவில் மிக முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்றான ஹார்மூஸ் குறித்து ஏற்பட்டுள்ள புதிய சர்ச்சை, அமெரிக்கா–ஈரான் உறவுகளில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது தொடர்பான ஈரானின் முன்மொழிவை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, அளித்த பேட்டியில், ஈரானின் நிலைப்பாடு சர்வதேச விதிகளுக்கு முரண்படுவதாக கடுமையாக விமர்சித்தார். உலகளாவிய கப்பல் போக்குவரத்து சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதே சர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படை என அவர் வலியுறுத்தினார்.
ஈரான் முன்வைக்கும் நிபந்தனைகள் “ஜலசந்தியை திறப்பது அல்ல; அது கட்டுப்பாட்டுடன் திறப்பு” போன்றதாகும் என்றும், அது உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்தார். எந்த நாட்டும் சர்வதேச கடல் வழிகளை தனக்கே உரிய கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
ஹார்மூஸ் வழித்தடம் உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையாகும். உலக எண்ணெய் விநியோகத்தின் பெரிய பகுதி இந்த கடல் வழியாகவே செல்கிறது. இதனால் இப்பகுதியில் ஏற்படும் எந்த பதற்றமும் உலக சந்தைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதே நேரத்தில், ஈரான் பாகிஸ்தான் வழியாக அமெரிக்காவுக்கு ஒரு புதிய முன்மொழிவை அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் கடல் போக்குவரத்து கட்டுப்பாடுகளை தளர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் இதுவரை முன்னேற்றம் காணவில்லை என கூறப்படுகிறது.
மேலும், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்க கோரிக்கைகள் குறித்து உள்நாட்டில் ஒருமித்த நிலை இல்லாததால் பேச்சுவார்த்தைகள் தாமதமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரம் மீண்டும் உலக அரசியல் மற்றும் பொருளாதார கவனத்தின் மையமாக மாறியுள்ளது. எண்ணெய் சந்தைகள் முதல் சர்வதேச தூதரக உறவுகள் வரை இதன் தாக்கம் தொடரும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
Read more: சித்திரையில் சொக்கரின் கரம் பிடித்த மீனாட்சி.. விழாக்கோலம் பூண்ட மாமதுரை..!



