2025-26-ம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
2025-26 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான ஆன்லைனில் https://tnmedicalselection.net என்ற இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 6 ஆம் தேதி துவங்கியது. அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளி பிரிவின் கீழ் உள்ள விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் தற்போதுள்ள மாற்றுத்திறனாளி சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம்.
ஏனெனில் MCC, DGHS மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு துவங்கியப் பின்னர் தான் சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள பிராந்திய மருத்துவ மையங்கள் இந்த சான்றிதழ்களை வழங்கத் தொடங்கும். எனவே, பிராந்திய மருத்துவ மையங்களிலிருந்து பெறப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழை பதிவேற்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: முன்னாள் அமைச்சர் முன்னிலையில் திமுக உள்ளிட்ட கட்சிகயை சேர்ந்த 500 பேர் அதிமுகவில் இணைந்தனர்…!