சென்னையில் பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில் ஆகிய மூன்று வகை போக்குவரத்திற்கும் ஒரே டிக்கெட் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.
சென்னையில் ஒரு இடத்தில் இருந்து பொது போக்குவரத்து முறையை பயன்படுத்தினால், அதாவது பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த மூன்று போக்குவரத்திலும் பயணிக்க மக்கள் தனித்தனியாக டிக்கெட் எடுக்க வேண்டும்.
ஆனால் இவை அனைத்திற்கும் ஒரே டிக்கெட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில், சென்னையில் பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில் ஆகிய மூன்று வகை போக்குவரத்திற்கும் ஒரே டிக்கெட் (One Card) வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.
சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (Chennai Integrated Transport Corporation) இதை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டம் மூலம், பயணிகள் தனித்தனியாக டிக்கெட் எடுக்காமல், ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி இந்த மூன்று வகை போக்குவரத்தையும் பயன்படுத்தலாம்.
சென்னை முழுவதும் ஒரே டிக்கெட்
அதன்படி, மாநகர பேருந்துகள், மின்சார ரயில்கள், மெட்ரோ சேவை அனைத்திலும் ஒரே டிக்கெட் மூலம் பயணம் மேற்கொள்ளலாம். சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலம் பிரத்யேக செயலி உருவாக்கப்படுகிறது. அனைத்து பொது போக்குவரத்துக்கும் ஒரே டிக்கெட் திட்டம் அடுத்த மாதம் அமலாக வாய்ப்புள்ளதாக என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செயலி மூலம் பயண துவக்கம், இலக்கை தேர்ந்தெடுத்து அனைத்து போக்குவரத்து முறைகளையும் பயன்படுத்தலாம். இந்த திட்டம் குறித்து மேலும் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒரே டிக்கெட் திட்டம், சென்னையில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது, பயணிகள் பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் ஆகியவற்றில் பயணம் செய்ய ஒரு டிக்கெட் வாங்கினால் போதுமானது. இது பயணிகளின் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
Read More : ஒரே நாளில் ரூ.600 குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..