சீனாவில் வயிற்று வலி இருப்பதாக கூறி மருத்துவமனைக்குச் சென்ற 64 வயது நபரின் குடலில் இருந்து டூத் ப்ரஷி மருத்துவர்கள் அகற்றினர். இதில் ஆச்சரியமான விஷியம் என்னவென்றால் 17 செ.மீ. நீளமுள்ள டூத் ப்ரஷ் அவரது உடலில் 52 ஆண்டுகளாக சிக்கியிருப்பது தெரியவந்தது.
South China Morning Post வெளியிட்ட செய்தியின்படி, அந்த நபர் சீனாவின் குவாங்டாங் மாகாண பகுதியை சேர்ந்த யாங் (Yang) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் 12 வயதாக இருக்கும்போது அந்த டூத் ப்ரஷை எதிர்பாராத விதமாக விழுங்கிவிட்டேன் என்பதை நினைவில் வைத்திருக்கிறேன். ஆனால் அதை என் பெற்றோரிடம் சொல்ல பயமாக இருந்தது,” என தெரிவித்தார். இதுநாள் வரை அவர், எவ்வித உடல்நல அசௌகரியங்களையும் எதிர்கொள்ளவில்லை என்று கூறினார்.
மருத்துவர்களின் சோதனைக்கு பிறகு எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை (Endoscopic Surgery) செய்தனர். இதையடுத்து, அந்த டூத் ப்ரஷ், அவரது உடலில் இருந்து 80 நிமிடங்களில் பாதுகாப்பாக வெளியே எடுக்கப்பட்டது. . கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு நோயாளியின் செரிமான அமைப்பிலிருந்து ஒரு பொருளை அகற்ற மருத்துவமனையில் எடுத்துக் கொண்ட மிக நீண்ட நேரம் இது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, குடலில் அந்த டூத் ப்ரஷ், அங்குமிங்கும் நகர்ந்து, உட்புற திசுக்களைத் துளைத்து, குடல் துளையை ஏற்படுத்தி, உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தக்கூடும். ஆனால் யாங்கின் விஷயத்தில், டூத் ப்ரஷ், அதிர்ஷ்டவசமாக குடலின் ஒரு வளைவில் சிக்கிக் கொண்டது, பல தசாப்தங்களாக அது அசையவே இல்லை என்று தெரிவித்தனர்.
இந்த சம்பவம் வைரலானதால், சமூக ஊடக பயனர்கள் அவர் நம்பமுடியாத அதிர்ஷ்டசாலி என்று கூறினர், இத்தனை ஆண்டுகளாக டூத் ப்ரஷ் அவரது உடலுக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. “ஐந்து தசாப்தங்களாக அவரது உடலில் டூத் ப்ரஷுடன் உயிர்வாழ்வது எவ்வளவு அதிர்ஷ்டசாலி?” என்று பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சீனாவில் ஒரு நோயாளியின் உடலில் டூத் ப்ரஷ் சிக்கியிருப்பது இது முதல் முறையல்ல. 2019 ஆம் ஆண்டில், குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனை, 20 ஆண்டுகளுக்கு முன்பு விழுங்கிய 14 சென்டிமீட்டர் டூ ப்ரஷை அகற்றியது. லி என்ற பெயர் கொண்ட 51 வயது நபர் வயிற்று வலிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மேலும் சிடி ஸ்கேன் மூலம் அவரது உடலில் ஒரு மர்மமான பொருள் தெரியவந்தது. பின்னர் லி, 20 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை முயற்சியின்போது விழுங்கிய டூத் ப்ரஷாக இருக்கலாம் என்று மருத்துவர்களிடம் கூறினார், அப்போது அவருக்கு போதைப்பொருள் பயன்படுத்தியதால் எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.