இன்டெல் நிறுவனம் தனது ஆட்டோமொடிவ் பிரிவை மூடுவதால் பெரும்பாலான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது.
ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து இயங்கி வந்த இன்டெல் தனது ஆட்டோமொடிவ் சிப் வணிகத்தை மூட உள்ளது. இன்டெல்லின் மூத்த அதிகாரி ஜாக் வீஸ்ட் தலைமையில் இந்தப் பிரிவு இயங்கி வந்தது. மேலும் மென்பொருள் வரையறுக்கப்பட்ட வாகன தளங்களில் பணிபுரிந்து வந்தது. இன்டெலின் இந்த முடிவால் இந்த பிரிவின் பெரும்பாலான ஊழியர்கள் வேலை இழப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பணி நீக்கங்கள் இன்டெல்லின் சிப் மேம்பாட்டிற்கு முக்கியமான பல பொறியியல் வேலைகளை பாதிக்கின்றன. இவற்றில் இயற்பியல் வடிவமைப்பு பொறியாளர்கள், தர்க்கம் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு நிபுணர்கள் மற்றும் கிளவுட் மென்பொருள் கட்டிடக் கலைஞர்கள் அடங்குவர். பொறியியல் மேலாளர்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் ஐடியின் துணைத் தலைவர் போன்ற பல மூத்த தலைமைப் பதவிகளும் நீக்கப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு 60 நாள் அறிவிப்பு அல்லது நான்கு வார குறுகிய கால அறிவிப்பு, ஒன்பது வார இழப்பீடு மற்றும் பிற சலுகைகள் வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
மறுபுறம், கலிபோர்னியாவில் உள்ள இன்டெல் நிறுவனத்தில் சமீபத்தில் பணி நீக்க அறிவிப்பு வெளியானது. மேலும் ஜூலை நடுப்பகுதியில் அந்நிறுவனம் அதன் பணியாளர்களில் மேலும் 20 சதவீதத்தினரை பணிநீக்கம் செய்யும் என்று கூறப்படுகிறது..
செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் இன்டெல்லின் பணியாளர்களில் 15 முதல் 20 சதவீதம் பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் இதுதொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாத தொடக்கத்தில் இன்டெல் நிறுவனத்தின் உற்பத்தி ஊழியர்களும் 20 சதவீதம் வரை குறைக்கப்படுவார்கள் என்ற தகவல் வெளியானது.. இதனால் முக்கிய அங்கமாக இருக்கும் நிறுவனத்தின் உள்-சிப் உற்பத்திப் பிரிவு கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லிப்-பு டான் இதுகுறித்து பேசிய போது , மூலோபாய முன்னுரிமைகளுடன் பணி நீக்கங்களை எவ்வாறு சீரமைப்பது என்பதை தலைமைத்துவம் தீர்மானிக்கும்” என்று கூறினார்.
பணிநீக்கங்கள் மட்டுமின்றி, இன்டெல் நிறுவனம் தனது சந்தைப்படுத்தல் செயல்பாடுகளின் சில பகுதிகளை அக்சென்ச்சர் நிறுவனத்திற்கு அவுட்சோர்ஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. இது வாடிக்கையாளர் தொடர்பு பணிகளைக் கையாள AI கருவிகளைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்டெல் பணி நீக்கம் செய்வது இது முதன்முறையல்ல.. 2024 ஆம் ஆண்டில் 15,000 ஊழியர்களை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்தது. இந்த பணிநீக்கம் மேலும் தொடரலாம் என்று கூறப்படும் நிலையில், தனது மிகப்பெரிய பணியாளர் மாற்றங்களில் ஒன்றுக்கு தயாராகி வருகிறது.
தொழில்நுட்ப துறை முழுவதுமே இப்போது கடினமான சூழலை எதிர்கொண்டு வருகிறது.. Layoffs.fyi இன் படி, 2025 ஆம் ஆண்டில் மட்டும் 62,000 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். மைக்ரோசாப்ட், கூகுள், அமேசான் மற்றும் மெட்டா போன்ற முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் உத்திகளை மறு மதிப்பீடு செய்து செலவினங்களைக் குறைப்பதன் மூலம் பணி நீக்கங்களை அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. இனி தினமும் இந்த நேரத்தில் நெட் பேங்கிங் இயங்காது..