பெரும் சோகம்!. மேகவெடிப்பால் கொட்டித்தீர்த்த கனமழை!. ஹோட்டல் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 9 தொழிலாளர்களை காணவில்லை!.

Cloudburst Uttarakhand 11zon

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில், ஹோட்டல் தளத்தின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் மேகவெடிப்பால், திடீரென கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் மேல் தளம் சேதமடைந்ததில் ஒன்பது தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர் . இந்த சம்பவம் நள்ளிரவு 2 மணியளவில் நடந்துள்ளது, காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. செய்தி நிறுவனமான PTI படி, தெஹ்ஸில் பர்கோட்டில் உள்ள பாலிகாட்-சிலாய் பந்த் அருகே மேகவெடிப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதாக உத்தரகாசி மாவட்ட மாஜிஸ்திரேட் பிரசாந்த் ஆர்யா தெரிவித்தார். உத்தரகண்ட் மாநிலத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது, மலைகளில் இருந்து உருண்டு விழுந்த பாறைகள் மற்றும் மண் ஆகியவற்றால் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை முதல் தொடர்ந்து மழை பெய்துவருவதால் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள சோன்பிரயாக்-முன்கட்டியா இடையேயான சாலையில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. கேதார்நாத்துக்கு பயணிக்கும் யாத்ரீகர்களுக்கு இந்தப் பாதை முக்கியமான வழிப்பாதையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேகவெடிப்பு (Cloudburst) மற்றும் திடீர் வெள்ளம் (Flash Floods) இந்தியாவுல, குறிப்பா மலைப்பிரதேசங்கள்ல ஏற்பட முக்கிய இயற்கை பேரிடர்கள். இந்த பேரிடர்கள் உயிரிழப்பு, சொத்து சேதம், உள்கட்டமைப்பு பாதிப்பு மாதிரியான பெரிய தாக்கங்களை ஏற்படுத்துது. இந்தியாவின் மலைப்பிரதேசங்களான இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர் மாதிரியான இடங்களில் இந்த மேகவெடிப்பு அடிக்கடி நிகழ்கிறது.

மேகவெடிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில், மிகச் சிறிய பரப்பளவில் (10 கிமீ x 10 கிமீ), ஒரு மணி நேரத்துக்குள் 10 செமீ அல்லது அதுக்கு மேல மழை பெய்வதே ஆகும். இது சாதாரண மழை இல்லை, ரொம்ப தீவிரமான, திடீரென்று பெய்யும் மழை. இந்த மழை பொதுவா மலைப் பகுதிகளில் நிகழும். ஏனென்றால், மலைகளின் உயரம் மற்றும் காற்று ஓட்டங்கள் இதற்கு காரணமாகின்றன. இந்தியாவில் மேகவெடிப்பு மழைக்காலத்தில், குறிப்பாக ஜூன் முதல் செப்டம்பர் வரை, அடிக்கடி நிகழ்கிறது. இதுக்கு முக்கிய காரணம், “ஒரோகிராஃபிக் லிஃப்ட் என்று கூறப்படும் ஒரு வானிலை நிகழ்வுதான். இதில் ஈரமான காற்று மலைகளைத் தாண்டும்போது மேல எழும்பி, குளிர்ந்து, கனமான மழையாக பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. அந்தவகையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Readmore: விஷாலுக்கு ஜுரம் வர அந்த பக்கவிளைவுதான் காரணம்!. ஆதாரத்துடன் பகீர் கிளப்பிய சுச்சி!.

KOKILA

Next Post

"முற்றிலும் பைத்தியக்காரத்தனம்; அழிவுகரமானது"!. டிரம்பின் வரி மசோதாவை கடுமையாக விமர்சித்த எலான் மஸ்க்!.

Sun Jun 29 , 2025
டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் வரி மற்றும் செலவு மசோதாவின் சமீபத்திய செனட் வரைவை, உலக பணக்காரரும், டெஸ்லா தலைவருமான எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்துள்ளார். டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின் எலான் மஸ்க்கை சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவர் என்ற சிறப்பு பதவியில் அமர்த்தினார். மஸ்க் இந்த பதவியில் 130 நாள் பணியாற்றுவதற்கு ஒப்புக் கொண்டிருந்தார். சில மாதங்களுக்கு முன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்துக்கு, செலவினங்களை குறைப்பதற்காக […]
elon musk 11zon

You May Like