ஆப்ரிக்க நாடான உகாண்டாவின் மேற்கு பகுதியில் பனியான்கோல் என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்கள் பின்பற்றும் வழக்கம் ஒன்று கேட்போரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இந்த பழங்குடி இனத்தவர்கள் திருமணத்தை ‛குஹிம்கிரா’ என்ற பெயரில் அழைக்கின்றனர். இங்கு 8 வயது முதல் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்.
இதில் விசித்திரம் என்னவென்றால் சிறுமியை திருமணம் செய்யப்போகும் ஆண், ‛சிறுமியின் தாயுடன்’ உடலுறவு வைப்பதாகும். சிறுமியை திருமணம் செய்யும் நபர் தாம்பத்தியத்தில் திறமையானவராக இருக்கிறாரா? என்பதை உறுதிப்படுத்த தான் பனியன்கோல் பழங்குடியினர் இதனை கடைப்பிடித்து வருகின்றனர்
அதன்படி திருமணத்துக்கு முன்பாகவே மணப்பெண்ணின் தாயுடன் ஒருநாள் இரவு முழுவதும் தங்கி உறவு வைத்து கொள்வார். இதில் மணமகன் அந்த பெண்ணை திருப்திப்படுத்த வேண்டும். ஏனென்றால் அந்த பெண் தான் மணமகன் வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வார்.
தாம்பத்தியத்தில் கெட்டிக்காரர் என அவர் கூறினால் திருமணம் நடக்கும். இல்லாவிட்டால் திருமணம் கேன்சல் செய்யப்பட்டு விடுமாம். ஒருவேளை திருமணம் ஓகே ஆனாலும் கூட முதலிரவில் இந்த பெண், தம்பதியின் அறைக்குள் அனுமதிக்கப்பட்டு புதுஜோடிக்கு தாம்பத்திய உறவுக்கு வழிக்காட்டுவாராம். சில அறிவுரைகளையும் வழங்குவாராம்.
இந்த விஷயம் நமக்கு புதிதாக இருந்தாலும் கூட அந்த பனியன்கோல் பழங்குடியினருக்கு இது பழக்கமான ஒன்றாக உள்ளது. மேலும் இதேபோல் இன்னும் பல வினோத நடைமுறையை இந்த பழங்குடியினர் பின்பற்றி வருகின்றனர். அதாவது மணப்பெண்ணின் கன்னித்தன்மையையும் திருமணத்துக்கு முன்பே மாப்பிள்ளை வீட்டார் பரிசோதிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் இந்த பழங்குடியினரை பொறுத்தவரை உடல் பருமனாக இருப்பது தான் பெண்கள் அழகு என்று நினைக்கின்றனர். இதற்காக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்து கொள்கின்றனர். மேலும் அவர்களின் உணவு பட்டியலில் மாட்டிறைச்சி, தினை கஞ்சி, பால் உள்ளிட்டவை கண்டிப்பாக இடம்பெறுமாம்.