பேருந்து மீது லாரி மோதி கோர விபத்திற்குள்ளானதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்து நாட்டின் மினொபியா மாகாணம் அர்ப் அல் சன்பாசா கிராமத்தில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 22 தொழிலாளர்கள் பயணம் செய்தனர். நேற்று காலை இந்த பேருந்து அஷ்மொன் பகுதியில் சென்ற போது சாலையில் எதிரே வேகமாக வந்த லாரி, பேருந்து மீது மோதியது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 19 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் பெரும்பாலோர் டீனேஜ் பெண் தொழிலாளர்கள் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மினிபஸில் பயணித்த தொழிலாளர்கள் அனைவரும், காஃப்ர் அல்-சனப்சா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அன்றாட வேலைக்குச் செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
எகிப்தின் தொழிலாளர் அமைச்சகம், உயிர் பிழைத்த மூன்று பேரை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாகவும், தலா 200,000 எகிப்திய பவுண்டுகள் (ரூ.3.4 லட்சம்) இழப்பீடாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு ரூ.34,000 வரை நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து மெனௌஃபியா மாகாண ஆளுநர் இப்ராஹிம் அபு லைமோன் விசாரணை உத்தரவிட்டுள்ளார். தொடக்க தகவலின்படி, அதிக வேகம் இந்த சோகம் நிறைந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
Read more: மனைவியை கொடுமைப்படுத்திய கணவருக்கு 3 ஆண்டு சிறை..!! – குற்றவியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு