அரசு/ நகராட்சி/ உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகளில் 01.08.2021 அன்றைய நிலவரப்படி மாணவர்கள், ஆசிரியர் எண்ணிக்கையின் அடிப்படையில் 9 மாவட்டங்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரின் பொதுத் தொகுப்பிலிருந்து பகிர்ந்தளிக்கப்பட்ட 3000 ஆசிரியரின்றி உபரி பட்டதாரி ஆசிரியர் (Surplus Post without person) பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் மற்றும் இதரப்படிகள் ஆகியவற்றினை நடைமுறையில் உள்ள IFHRMS மூலமாக அப்பணியிடங்கள் பெற்று வழங்க ஏதுவாக, தோற்றுளிக்கப்பட்ட வெவ்வேறு அரசாணைகளை ஒருங்கிணைத்தும் மற்றும் அப்பணியிடங்களுக்கு, பணியாளர்களை நிரப்பிய நாளிலிருந்து ஒரு ஆண்டிற்கு மட்டும் தொடர் நீடிப்பு வழங்கியும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, இராணிப்பேட்டை ஆகிய ஒன்பது (9) மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட 3000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு, அப்பணியிடங்களில் பணியாளர்களை நிரப்பிய நானிலிருந்து ஒரு ஆண்டிற்கு மட்டும் தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு 17.05.2023 அன்று உடன் முடிவடைந்துள்ளது என்றும் தற்பொழுது, இந்த பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு அரசாணை பெற இப்பணியிடங்களுக்கு 18.08.2023 காலதாமதம் ஆகும் நிலையில், முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு ஊதியக்கொடுப்பாணை(Pay Authorization) வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
9 மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களில் பணிபுரியும் 3000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு முடிவுற்ற நிலையில், இப்பணியிடங்களுக்கு 17.05.2023 முதல் 31.12.2025 மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் அரசிற்கு கருத்துரு அனுப்பியுள்ளார். மேலும், இப்பணியிடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் ஊதியம் பெறத்தக்க வகையில் இப்பணியிடங்களுக்கு 18.08.2023 முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு ஊதியக்கொடுப்பாணை (Pay Authorlzatlon) வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.