கேரளா, திரிபுரா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்கள் முடிவு இன்று வெளியீடு. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணிக்கும் இடையே நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் இது பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 5ஆம் தேதி 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி உத்தரபிரதேசத்தில் உள்ள கோசி தொகுதி, ஜார்கண்டின் டும்ரி மற்றும் தன்பூர் தொகுதிகள், திரிபுராவில் உள்ள போக்ஸாநகர், உத்தரகாண்டின் பாகேஷ்வர்தொகுதி ஆகிய 5 தொகுதிகளில் ஒருங்கிணைந்து இந்த இடைத்தேர்தலை சந்தித்தது. மேலும் மேற்கு வங்கத்தில் உள்ள துப்குரி தொகுதி மற்றும் கேரளாவின் புதுப்பள்ளி தொகுதியில் இந்தியா கூட்டணி தனித்து போட்டியிட்டது.
இந்த 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 5ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக வாக்குபதிவு இன்று கால 8 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது.