fbpx

மொரோக்கோவை உலுக்கிய நிலநடுக்கம்..!! 635 பேர் சடலமாக மீட்பு..!! பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம்..!!

மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி 635 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொரோக்கோ நாட்டின் மாரேஷ் என்ற பகுதியில் முதற்கட்டமாக இரவு 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாகவும், இது மரகேஷிலிருந்து (Marrakech) தென்மேற்கே திசையில் 44 மைல் (71 கிலோமீட்டர்) தொலைவில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பின்னர், மீண்டும் இன்று அதிகாலை 3.14 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மராகேச் என்ற இடத்தில் இருந்து 79 கி.மீ தூரத்தை மையமாக கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டேர் அளவுகோலில் 7 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தற்போது வரை 635 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 350 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், 150-க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

காதல் ஜோடிகளே..!! இரவில் தனியாக சந்தித்து பேசுகிறீர்களா..? உஷாரா இருங்க..!! தூத்துக்குடியில் அதிர்ச்சி..!!

Sat Sep 9 , 2023
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும், அவரது காதலனும் நேற்றிரவு தூத்துக்குடியில் உள்ள மத்திய பாதுகாப்பு அலுவலர் குடியிருப்பு அருகே உள்ள கடற்கரை பகுதிக்கு சென்று தனிமையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், காதலனை அடித்து விரட்டி விட்டு அந்த பெண்ணை தூக்கிச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த […]

You May Like