நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும் பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்றும் பல்வேறு வேலைவாய்ப்பு செய்திகள் வெளியிடப்பட்டிருக்கிறது.
அதன்படி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அந்த பல்கலைக்கழகத்தில், காலியாக இருக்கின்ற project assistant பணிக்கு ஆள் சேர்க்கை நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், இந்த பணிக்கு இரண்டு காலி பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் பணியில் சேர விரும்பும் நபர்கள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், b.sc தேர்ச்சி பெற்ற நபர்களாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு, இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு, 16000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலே தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உள்ள விண்ணப்பதாரர்கள், நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் https://mkuniversity.ac.in//new/notification_2023/RUSA%20ADVERTISEMENT.pdf என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு 20,9,2023 அன்று மாலைக்குள் அதிகாரப்பூர்வமான மின்னஞ்சல் முகவரிக்கு, அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.