fbpx

தமிழகமே ரெடியா…? வரும் 25, 26 ஆகிய தேதிகளில் இளநிலை உதவியாளர் பணிக்கு கலந்தாய்வு…! முழு விவரம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னையில் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டதில் பள்ளிக்கல்வித்துறைக்கு 673 ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிநாடுநர்களுக்குக் கலந்தாய்வு நடைபெற உள்ளதால் 25,26 நாளில் கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இத்துடன் பணிநாடுநர்களின் பெயர் விவரப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நியமன அலுவலர்களான முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் நிர்வாக வரம்புக்குட்பட்ட பணிநாடுநரின் விவரங்களைக் கண்டறிந்து பட்டியல் தயார் செய்து, அவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ள விவரங்களைக் குறிப்பிட்டு அழைப்பாணை அனுப்பப்பட வேண்டும். தங்கள் ஆளுகைக்குட்பட்ட பணிநாடுநர்கள் அனைவருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டதை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களால் உறுதி செய்யப்பட வேண்டும்.

மேலும் 27.09.2023 அன்று பணிநாடுநர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட உள்ளதால் அந்நாள் வரை பணிநாடுநர்கள் தங்கள் சொந்த செலவில் தங்கும் வசதி மற்றும் இதர வசதி ஏற்பாடு செய்து கொள்ளவும் முதன்மைக் கல்வி அலுவலர்களால் அறிவுறுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

சரவெடி பட்டாசுகள் தயாரிக்க தடை..! இந்த நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் அதிரடி…!

Sat Sep 23 , 2023
பட்டாசுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், பட்டாசு தயாரிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் அர்ஜுன் கோபால், கோபால் சங்கர நாராயணன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு, பேரியம் என்கிற அலுமினிய பொருட்களுடன் கூடிய சரவெடி பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டதுடன், குறைந்த அளவிலான சத்தம் மற்றும் புகையை வெளியிடக்கூடிய பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதிக அளவில் அலுமினியம் […]

You May Like