fbpx

TRAI: தொழிற் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று கால அவகாசம் நவம்பர் 7-ம் தேதி வரை நீட்டிப்பு…!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) “பி.எம்.ஆர்.டி.எஸ் மற்றும் சி.எம்.ஆர்.டி.எஸ் உரிம விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மறுஆய்வு செய்வது” குறித்த ஆலோசனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஆலோசனை அறிக்கையில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து பங்குதாரர்களிடமிருந்து எழுத்துப்பூர்வமான கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி 26.09.2023 என்றும், மாற்றுக் கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி 10.10.2023 என்றும் நிர்ணயிக்கப்பட்டது.

கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற தொழிற் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, எழுத்துப்பூர்வமான கருத்துகள் மற்றும் மாற்றுக் கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை முறையே 24.10.2023 மற்றும் 07.11.2023 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நீட்டிப்புக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது.

கருத்துகள் / மாற்றுக் கருத்துகள் டிராய் ஆலோசகர் (நெட்வொர்க்குகள், ஸ்பெக்ட்ரம் மற்றும் உரிமங்கள்) திரு அகிலேஷ் குமார் திரிவேதிக்கு advmn@trai.gov.in மின்னணு வடிவத்தில் அனுப்பலாம். ஏதேனும் விளக்கம் / தகவலுக்கு, ஆலோசகர் அகிலேஷ் குமார் திரிவேதியை +91-11-23210481 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

நீங்கள் 10ம் வகுப்பு படித்திருக்கிறீர்களா.....? அப்படி என்றால், உங்களுக்காக காத்திருக்கிறது அரசு வேலை வாய்ப்பு, இதை உடனே செய்யுங்கள்....!

Wed Sep 27 , 2023
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இருக்கின்ற பல் மருத்துவப் பிரிவில் இருக்கின்ற காலி பணியிடங்கள் குறித்த வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக நாம் தெரிந்து கொள்ளலாம். அதன்படி பல் மருத்துவர், பல் மருத்துவ உதவியாளர், நிர்வாக உதவியாளர் என மூன்று பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிகிறது. இதில் பல் மருத்துவ பணியில் சேர விரும்பும் நபர்கள் அரசாங்கத்தால், அங்கீகரிக்கப்பட்ட […]

You May Like