ஜீ தமிழ் தொலைக்காட்சி பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோக்களையும், வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட தொடர்களையும் ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் துர்கா சரவணன் இயக்கத்தில் கடந்த மே 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தொடர் தான் அண்ணா. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு அண்ணா சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
மிர்ச்சி செந்தில் மற்றும் நித்யா ராம் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ள இந்த சீரியல் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது. மேலும் இந்த தொடரில் செந்திலின் தங்கைகளாக பூவிலங்கு மோகன், ப்ரீதா சுரேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில், சூப்பர்ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு நடிகர் நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அண்ணா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 28,000 சம்பளமாக மிர்ச்சி செந்தில் வாங்கி வருகிறார் எனக் கூறப்படுகிறது.
இதில் பரணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நித்யா ராமின் ஒரு நாள் சம்பளம் 25 ஆயிரம் ரூபாய். அதே சீரியலில், இசக்சி ரோலில் நடித்து வரும் ப்ரீதா சுரேஷின் ஒரு நாள் சம்பளம் 12 ஆயிரம், ரத்னா வேடத்தில் நடித்து வரும் சுனிதா ஒரு நாளைக்கு 12 ஆயிரம் ரூபாயும், வீரா வேடத்தில் நடித்து வரும் சுசித்ராவிற்கு 10 ஆயிரமும், செல்ல கனி வேடத்தில நடித்து வரும் ஹேமா சின்ராஜூக்கு 6 ஆயிரம் ரூபாயும் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.



