திமுக எம்பி ஜெகத்ரட்சகன் 1,200 கோடி ரூபாய் அளவிற்கு வரியைப்பு செய்துள்ளார் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் சவீதா குழுமத்தின் கல்வி நிறுவனங்களுடன் தொடர்புடைய சுமார் 100 இடங்களில் ஒரு வாரமாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் 400 கோடி மதிப்பிலான கணக்கில் வராத கட்டண ரசீதுகளும், மதுபான தொழிலில் 500 கோடிக்கு போலிச் செலவும், டிரஸ்ட்களில் இருந்து 300 கோடி ரூபாய் திருப்பி அனுப்பப்பட்டதும் கிடைத்துள்ளன என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் கணக்கில் வராத 32 கோடி ரொக்கம் மற்றும் 28 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளையும் கைப்பற்றியதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கல்வி நிறுவனங்கள், மதுபான ஆலைகள், மருந்துகள், மருத்துவமனைகள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்டவை இடங்களில் கடந்த வாரம் வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்றது. இந்த சோதனையின் போது பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள் எடுக்கப்பட்டது.
400 கோடிக்கு மேல் கணக்கில் வராத கட்டண ரசீதுகள் மற்றும் 25 கோடிக்கு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியதாக பொய்யான ரசிதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.கணக்கில் வராத கட்டண ரசீதுகளும், மதுபான தொழிலில் 500 கோடிக்கு போலிச் செலவுகள் செய்துள்ளனர். இல்லாத நிறுவனங்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டு, கணக்கில் காட்டப்படாத முதலீடுகளைச் செய்ததற்காக பணமாக திரும்பப் பெறப்பட்டதைக் காட்டுவதற்கான ஆதாரங்களையும் அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், அறங்காவலர்களின் தனிப்பட்ட செலவினங்களுக்காகவோ அல்லது பல்வேறு வணிகங்களில் ஈடுபடுத்துவதற்காகவோ அந்தந்த அறக்கட்டளைகளில் இருந்து 300 கோடி திருப்பி விடப்பட்டதாகக் கூறுகின்றன. ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு தொழில் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்காக ஒரு குழுவால் செலுத்தப்பட்ட பணம் இதில் அடங்கும்” என்று ஐடி துறையின் அறிக்கை கூறுகிறது.