சண்டையில் இருந்தபோது மனைவியை உல்லாசத்திற்கு அழைத்த கணவன்..!! மாமியார் வீட்டில் நடந்த பயங்கரம்..!!

Sex 2025 6

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சுராபுரா பகுதியைச் சேர்ந்த மாரம்மா (35) என்பவருக்கும், சங்கப்பா (40) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மாரம்மா கடந்த ஓராண்டாக தனது தாய் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.


இந்நிலையில், சம்பவத்தன்று சங்கப்பா தனது மனைவியை பார்ப்பதற்காக மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே அவர் மாரம்மாவை தனிமையில் இருக்க அழைத்துள்ளார். ஆனால், மாரம்மா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மனைவியின் மறுப்பால் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த சண்டை முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சங்கப்பா, வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து மாரம்மாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாரம்மா, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மனைவி உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கப்பா, அங்கிருந்து நேராக அருகிலிருந்த காவல் நிலையம் சென்று சரணடைந்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த மாரம்மாவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சங்கப்பா மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : காமெடி நடிகரின் காம வெறி..!! சினிமா பிரபலங்களுக்கு 9ஆம் வகுப்பு மாணவியை விருந்தாக்கிய கொடூரம்..!! சென்னையை உலுக்கிய சம்பவம்..!!

CHELLA

Next Post

அலர்ட்! தீபாவளி வந்தாச்சு; இதை செய்தால் மொத்த பணமும் காலி..! ஆன்லைன் மோசடிகளை எப்படி தவிர்ப்பது?

Tue Oct 7 , 2025
இந்தியாவில் பண்டிகைக் காலம் என்பது ஷாப்பிங் நிறைந்ததாகவே இருக்கும்.. இ காமர்ஸ் ஆன்லைன் தளங்கள் மூலம் பலரும் ஷாப்பிங் செய்கின்றனர்.. இருப்பினும், சில நாட்களில் தீபாவளி வரவிருப்பதால், பலரும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வார்கள்.. ஆனால் ஆன்லைனில் செய்யும் தவறு சைபர் கிரிமினல்கள் பணம் மோசடி செய்ய வழி வகுக்கிறது.. மேலும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் பிற இடங்கள் வழியாக பல மோசடிகள் நடைபெறுகின்றன.. இந்த மோசடிகள் குறித்தும் அவற்றில் சிக்காமல் […]
scam

You May Like