சென்னை அசோக் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.. அப்போது பேசிய அவர் “ எனக்கு மும்மொழியும் இல்லை, இரு மொழியும் இல்லை.. ஒரே மொழி தாய்மொழி தான்.. சாதி, மதம் எல்லாம் என் அடையாளம் இல்லை.. நான் இந்து என்றோ முஸ்லீம் என்றோ சாதி பெயரை வைத்தோ அடையாளப்படுத்தி கொள்ள முடியாது.
பாஜக உடன் தேர்தல் கூட்டணி வைப்பீர்களா என்று கேட்கின்றனர்.. அப்படி வைப்பதாக இருந்தால் இந்த 15 ஆண்டுகளில் கூட்டணி வைத்திருக்க மாட்டேனா.? மதங்கள் எங்கள் அடையாளம் இல்லை என்பதற்காக நாம் தமிழர் என்ற பெயரில் கட்சியை தொடங்கினோம்.. தமிழர் என்ற இனம் தான் எங்கள் அடையாளம்..
ஈழத்திலே கொத்து கொத்தாக செத்து விழுந்தோம்.. நாடார், கிறிஸ்தவர், செட்டியார் இறந்தார்கள் என்று பதிவு செய்யவில்லை.. தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்று குறிப்பிட்டனர்.. பிணமாக விழும் போதும் இனமாக தான் விழுந்தோம்.. நாம் தமிழர் கட்சி எந்த காலத்திலும் இந்திய கட்சி, திராவிட கட்சிகளோடு கூட்டணி வைக்காது. அதே நிலைப்பாட்டில் 15 ஆண்டுகளாக நிற்கிறேன்..
அதே நிலையில் 2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும்.. தமிழ் சமூகத்தில் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.. 2026 தேர்தலிலும் தனித்து நிற்போம், 2029 தேர்தலில் தனித்து நிற்போம்.. தனித்துவத்தோடு நிற்போம். தோல்வியை கண்டு துவண்டு போவது நபர்கள் நாங்கள் இல்லை.. வெற்றி, தோல்வியை சமமாக பார்ப்பவர்கள் நாங்கள்
தமிழ்நாட்டில் பெரிய கட்சி நாம் தமிழர் கட்சி தான்.. தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் தொடர்ச்சியாக வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் தான்.. யாருடன் கூட்டணி கிடையாது.. எந்த காலத்திலும் தனித்தே போட்டியிடுவோம்.. பிறர் தோள் மீது ஏறி நின்று எங்கள் உயரத்தை காட்ட நாங்கள் விரும்பவில்லை.. மக்களை நம்பி மக்களோடு கூட்டணி வைத்து போட்டியிடும் கட்சி நாம் தமிழர்.. நாங்கள் மக்களுக்கானவர்கள்.. எனக்கு பாதுகாப்பு கொடு என்று கேட்பவர்கள் நாங்கள் இல்லை.. எனவே அவருடன் கூட்டணியா இவருடன் கூட்டணி என்ற கேள்விக்கெல்லாம் ஒரே பதில்.. இறைமகன் இயேசு கிறிஸ்து மீது ஆணையாக எந்த காலத்திலும் எவருடனும் கூட்டணி இல்லை.” என்று தெரிவித்தார்..



