ஷேக் ஹசீனாவின் மரண தண்டனைக்கு இந்தியாவின் பதில் : ‘ஆக்கபூர்வமாக ஈடுபடுவோம்’

sheik hasena mea

கடந்த ஆண்டு டாக்காவில் அரசு எதிர்ப்பு மாணவர் போராட்டக்காரர்கள் மீது நடைபெற்ற “மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்” குறித்த வழக்கில், பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு சர்வதேச தீர்ப்பாயம் வழங்கிய மரண தண்டனை தீர்ப்புக்கு இந்தியா இன்று அதிகாரப்பூர்வமாக பதிலளித்தது.


கடந்த ஆண்டு ஆட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், ஹசினா இந்தியாவுக்கு தஞ்சம் புகுந்து, அதற்கு பின் டெல்லியில் உள்ள ஒரு ரகசிய பாதுகாப்பு வீட்டில் தங்கி வருவதாக, அவரது மகன் சஜீப் வாசேத் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் பதில்

வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் “ வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அறிவித்த தீர்ப்பை இந்தியா கவனத்தில் எடுத்துள்ளது. அண்டை நாடாகிய இந்தியா, பங்களாதேஷ் மக்களின் நலனில் அமைதி, ஜனநாயகம், அனைத்துப்பட்டவர்களும் இணைந்த வளர்ச்சி, நிலைத்தன்மை இவற்றில் தொடர்ந்து உறுதியாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளது..

மேலும், “ அவற்றை உறுதி செய்வதற்காக, இந்தியா வங்கதேசத்தின் அனைத்து பங்குதாரர்களுடனும் நன்மை கருதி உரையாடத் தயாராக உள்ளது.” என்று தெரிவித்தது.

இந்த அறிக்கை, ஹசினா “குற்றவாளி தப்பிச் சென்றவர்” (fugitive accused) எனக் கூறி, அவரை இந்தியா திருப்பி அனுப்ப வேண்டும் என்று வங்கதேச வெளியுறவு அமைச்சகம் கோரிய பின்னர் வந்துள்ளது.

ஷேக் ஹசினா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, மரண தண்டனை பங்களாதேஷ் International Crimes Tribunal, ஹசினாவை மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என அறிவித்தது: வன்முறையைத் தூண்டுதல், கொலை செய்ய உத்தரவு, அத்துமீறல்களைத் தடுக்க தவறுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவாளி என அறிவித்தது..

நீதிமன்றம் மேலும் “அவருக்கு நாங்கள் விதிக்கும் ஒரே தண்டனை — அது மரண தண்டனையே.” என்று தெரிவித்தது..

தீர்ப்புக்கு பதிலளித்த ஹசினா, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து, “பொய்யான முறையில் அமைக்கப்பட்ட, மக்கள் ஆதரவு இல்லாத அரசால் நியமிக்கப்பட்ட, தந்திரமான நீதிமன்றத்தின் தீர்ப்பு மட்டுமே இது” என்று கூறினார்.

முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸமான் கான் கமாலுக்கும், நான்கு “மனிதத்தன்மைக்கு எதிரான குற்றங்கள்” காரணமாக, அவரது மரண தண்டனை வழங்கப்பட்டது.

ஹசினாவை மீண்டும் பங்களாதேஷுக்கு ஒப்படைக்க வேண்டி கோரிக்கை

வங்கதேச வெளியுறவு அமைச்சகம், இந்தியாவுடனான ஒப்படைப்பு ஒப்பந்தத்தை குறிப்பிட்டு, ஹசினா பங்களாதேஷுக்கு திரும்ப அனுப்பப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அவர் ஆட்சி நீக்கத்திற்குப் பிறகு தொடக்கம் முதல் நியூடெல்லியில் தங்கி வருவதை அது குறிப்பிடுகிறது. அந்தக் கடிதத்தில் “மனிதத்தன்மைக்கு எதிரான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்களுக்கு எந்த நாடும் தஞ்சம் வழங்குவது, மிகுந்த பகைமையான செயலும், நீதிக்கான அநாகரீக புறக்கணிப்பும் ஆகும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது..

Read More : மரண தண்டனைக்கு ஷேக் ஹசீனா பதில்.. “ நியாயமான வாய்ப்பு வழங்கவில்லை.. இது மோசடியான தீர்ப்பு..” என கண்டனம்!

RUPA

Next Post

3-வது கணவரை விவாகரத்து செய்த பிரபல தென்னிந்திய நடிகை.. சிங்கிளாக இருப்பதாக அறிவிப்பு..!

Mon Nov 17 , 2025
பிரபல தென்னிந்திய நடிகை மீரா வாசுதேவன், தனது 3-வது கணவர் விபின் புதியங்கத்திடம் இருந்து விவாகர்த்து பெற்றதாக அறிவித்துள்ளார். 2024 மே மாதத்தில் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகள், சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர். அவர்களின் விவாகர்த்து செய்திகள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீரா வசுதேவன் தனது விவாகர்த்தை ‘அதிகாரப்பூர்வமாக’ அறிவித்ததிலிருந்து, அது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது. மீரா வாசுதேவன் நவம்பர் 16 […]
meera vasudevan

You May Like