fbpx

தமிழகமே விடுமுறை முடிந்து இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு…! ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!

தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படவுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, டிச.23 முதல் அரையாண்டு விடுமுறை தொடங்கியது. ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் உரிய சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர், கழிவறை வசதிகளை உறுதி செய்ய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சேதமடைந்த கட்டடங்கள் இருந்தால் அவற்றில் மாணவர்களை அமர வைக்கக் கூடாது. பாதுகாப்பான இடங்களில் மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்த வேண்டும்.

இதுதொடர்பாக போதிய அறிவுறுத்தல்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வட தமிழகத்தில் மிக்ஜாம் புயல் பாதிப்புகள், தென் தமிழகத்தில் அதி கனமழை பாதிப்புகள் ஆகியவற்றால் பல்வேறு பள்ளிகள் பாதிக்கப்பட்டன. இவற்றை சரியான முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகளுக்கான தேதியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். அதன்படி, 6 முதல் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வருகின்ற ஜனவரி 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜனவரி 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

2024 புத்தாண்டு ராசிபலன்கள்!… எந்த ராசிகாரர்களுக்கு இந்த ஆண்டு ராஜயோகம்!

Tue Jan 2 , 2024
2024 ஜோதிட சாஸ்திரப்படி 2024ல் முக்கியமான கிரகங்கள் பெயர்ச்சி அடையும். இதன் மூலம் 4 ராசிக்காரர்கள் லட்சுமி தேவியின் அருளால் செல்வச் செழிப்பைப் பெறுவார்கள். 2024 ஆம் ஆண்டில், மகிழ்ச்சியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தரும் வகையில் குரு பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த ஆண்டு சனி பகவான் கும்ப ராசியிலும், குரு பகவான் ஆண்டின் முதல் பாதியில் மேஷ ராசியிலும், பின்னர் ரிஷப ராசிக்கு மாற உள்ளார். ராகு மீனத்திலும், […]

You May Like