திடீரென திருந்திய கள்ளக்காதலி..!! உயிருடன் குழி தோண்டி புதைத்த கணவரின் பங்காளி..!! தருமபுரியில் திடுக்கிடும் சம்பவம்..!!

Sex 2025 2

தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, உடலை டிராக்டர் மண் கொண்டு மூடி மறைக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபு என்பவரது மனைவி ராஜேஸ்வரி (30), தனது கணவரின் பங்காளியான அனுமந்தன் (40) என்பவருடன் பழகி வந்த நிலையில், இந்த விபரீத முடிவு அரங்கேறியுள்ளது.


ராஜேஸ்வரிக்கும் அனுமந்தனுக்கும் இடையிலான பழக்கம் குறித்து குடும்பத்தினருக்கு தெரியவந்ததால், கடந்த சில நாட்களாக ராஜேஸ்வரி அவருடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டு பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அனுமந்தன், ராஜேஸ்வரியை பழிவாங்கத் துடித்துள்ளார். நேற்று மதியம் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பங்கேற்க சென்ற ராஜேஸ்வரியை வழிமறித்த அனுமந்தன், கடைசியாக சில விஷயங்கள் பேச வேண்டும் எனக் கூறி கல்லுகொல்லைமேடு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, கண் இமைக்கும் நேரத்தில் ராஜேஸ்வரியை குழிக்குள் தள்ளி, அவர் தலை மீது பெரிய கல்லைப் போட்டு அனுமந்தன் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கொலையை மறைப்பதற்காக தான் ஏற்கனவே திட்டமிட்டுத் தயாராக வைத்திருந்த டிராக்டரில் இருந்த கட்டிட கழிவு மண்ணைக் குழிக்குள் கொட்டி உடலை மூடிவிட்டுத் தப்பியோடியுள்ளார். அந்தப் பகுதியில் அனுமந்தனின் சந்தேகத்திற்குரிய நடமாட்டத்தை கவனித்த விவசாயிகள், உடனடியாக இண்டூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணைத் தோண்டிப் பார்த்தபோது ராஜேஸ்வரி சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அனுமந்தன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஜேசிபி ஆப்ரேட்டர் ஜெகன் (25) ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

Read More : தமிழ்நாட்டில் உருவானது புதிய அரசியல் கட்சி..!! இதுதான் எங்கள் நோக்கம்..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!

CHELLA

Next Post

குளிர்காலத்தில் அதிக சூடான நீரில் குளியலா..? மிகவும் ஆபத்து..!! எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்..!!

Sun Jan 11 , 2026
குளிர்காலம் தொடங்கிவிட்டாலே அதிகாலையில் படுக்கையை விட்டு எழுவதும், அதன்பின் குளிப்பதும் பலருக்கும் ஒரு பெரும் சவாலாகவே மாறிவிடுகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு நாளைக்கு இருமுறை குளிப்பவர்கள் கூட, பனிப்பொழிவு காலங்களில் தண்ணீரை பார்த்தாலே அஞ்சி சில நாட்கள் குளியலைத் தவிர்ப்பதுண்டு. ஆனால், இந்தக் குளிர்காலச் சோம்பல் நம்மை மந்தமாக்குவதோடு, புத்துணர்ச்சியையும் பறித்துவிடுகிறது. குளிர்காலத்தில் தினமும் குளிப்பது அவசியமா? அதன் சாதக, பாதகங்கள் என்னென்ன? என்பது குறித்த ஒரு விரிவான மருத்துவ […]
bathing 11zon

You May Like