மக்களவை தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் வாக்காளர் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்டவைகள் கடந்த மாதங்களில் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. இதனை மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு வெளியிட உள்ளார்.
தமிழகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட உள்ளனர்.