“அது காலாவதியான செய்தி”..!! EPS அணி விரைவில் தனிமைப்படுத்தப்படும்..!! OPS எச்சரிக்கை..!!

EPS OPS 2025

தேனி மாவட்டம் போடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பின் நடவடிக்கைகள் குறித்து தனது விமர்சனங்களை முன்வைத்தார். தன்னைத் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ கட்சியிலிருந்து நீக்கியதாக ஈ.பி.எஸ் தரப்பு கூறி வருவது, செல்லுபடியாகாத ஒரு காலாவதியான செய்தி என்று அவர் கூறினார்.


ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் சாதாரண தொண்டர்களின் வாக்குகள் மூலம் உருவாக்கப்பட்டவை என்பதால், ஒரு குறிப்பிட்ட குழு மட்டும் கூடித் தன்னை நீக்கியது சட்டப்படி எடுபடாது என்று கூறினார். கட்சியின் தற்போதைய பின்னடைவுகள் குறித்துப் பேசிய ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருவதாக தெரிவித்தார்.

கட்சியைக் கட்டுக்கோப்பாக வழிநடத்தும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்றும், ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் மற்றும் தொண்டர்கள் இன்றும் தன் பக்கமே இருப்பதாகவும் அவர் உறுதியுடன் தெரிவித்தார். தலைமைப் பண்பு இல்லாத காரணத்தினாலேயே அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், வரும் தேர்தல்களில் மக்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும், தொண்டர்களின் ஆதரவின்றி இயங்கும் அந்தத் தரப்பு விரைவில் தனிமைப்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார். ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கத்தை ஒரு தனி நபர் தனது சுயநலத்திற்காக சிதைத்து வருவதாகத் தெரிவித்த அவர், நீதிக்கான தனது போராட்டம் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தொடரும் என திட்டவட்டமாக குறிப்பிட்டார்.

Read More : பெட்ரூமில் ஒட்டுத் துணி இல்லாமல் இருந்த மாமனார் – மருமகள்..!! நேரில் பார்த்த மாமியாருக்கு நேர்ந்த கதி..!! கதிகலங்கிப் போன மகன்..!!

CHELLA

Next Post

வருமான வரி முதல் தங்கம் விலை வரை..!! நாளை தாக்கல் ஆகும் பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்திற்கு காத்திருக்கும் ஜாக்பாட்..?

Sat Jan 31 , 2026
நாட்டின் கண்கள் அனைத்தும் தற்போது டெல்லியை நோக்கித் திரும்பியுள்ளன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026-27 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாளை (பிப்ரவரி 1) காலை 11 மணிக்குத் தாக்கல் செய்கிறார். வழக்கமாக விடுமுறை நாட்களில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை இல்லை என்றாலும், இந்த ஆண்டு பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை வந்தபோதிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக, முதலீட்டாளர்களின் வசதிக்காக பங்குச் சந்தைகளும் நாளை வழக்கம் […]
Union Budget 2026

You May Like