இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI), அங்கீகரிக்கப்படாத ‘நிலையான அளவு சேர்க்கை மருந்துகள்’ (Fixed Dose Combinations – FDCs) மீது நாடு தழுவிய தீவிர நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார். இந்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, 90 வகையான FDC-களை அவற்றின் பொதுவான பெயரின் அடிப்படையில் ஆய்வு செய்யக் கோரியுள்ளது. குறிப்பாக, மாநில அல்லது யூனியன் பிரதேச மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளால் இவற்றுக்கு ஏதேனும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த மருந்துகளில் மல்டி வைட்டமின்கள், ஃபோலிக் அமிலங்கள், சிரப்புகள், பாராசிட்டமால், Clotrimazole மற்றும் Betamethasone களிம்புகள், Diclofenac Potassium மற்றும் Dicyclomine Hydrochloride மாத்திரைகள் உள்ளிட்டவை அடங்கும்.
2025 ஆம் ஆண்டிற்கான ‘SUGAM’ ஆய்வகப் பரிசோதனைத் தரவுகளின்படி, பெருமளவிலான மருந்து மாதிரிகள் அங்கீகரிக்கப்படாதவை என்றும், அவை ‘புதிய மருந்து’ (New Drug) என்ற வகையின் கீழ் வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ‘புதிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பரிசோதனை விதிகள், 2019’-இன் விதி 3-இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி, உரிமம் வழங்கும் அதிகாரியால் ஒப்புதல் அளிக்கப்படாவிட்டால், எந்தவொரு புதிய மருந்தும் விற்பனைக்காகத் தயாரிக்கப்படக்கூடாது என்று DCGI உத்தரவிட்டுள்ளது..
மேலும், ‘புதிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பரிசோதனை விதிகள், 2019’-இன் விதி 80-இன் படி, விற்பனை அல்லது விநியோகத்திற்காக, API வடிவிலோ அல்லது மருந்துச் சேர்க்கை வடிவிலோ (Pharmaceutical formulation) ஒரு புதிய மருந்தை உற்பத்தி செய்ய விரும்பும் நபர், மத்திய உரிமம் வழங்கும் அதிகாரியிடம் ‘படிவம் CT-21’-இல் விண்ணப்பிக்க வேண்டும்; அத்துடன், ஆறாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தையும் செலுத்த வேண்டும்,” என்று உத்தரவிட்டுள்ளது.
“விநியோகச் சங்கிலியில் அங்கீகரிக்கப்படாத மருந்துகள் இருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்; இது பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியது. மேலும், இது ‘மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940’ மற்றும் அதன் கீழ் இயற்றப்பட்ட விதிகளுக்கு இணங்காத தன்மையையும் சுட்டிக்காட்டுகிறது,” என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அதற்கேற்ப, சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள், சந்தைப்படுத்துபவர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் மீது, தேவைக்கேற்ப தகுந்த விசாரணை மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளைத் தொடங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தகைய அங்கீகரிக்கப்படாத மருந்துகள் உற்பத்தி செய்யப்படுவதையும், விற்பனை மற்றும் விநியோகம் செய்யப்படுவதையும் தடுப்பதற்கு, கடுமையான கண்காணிப்பு மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது,” என்று அங்கீகரிக்கப்படாத மருந்துகளை விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கு எதிரான தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்..
மேலும் “NDCT விதிகள், 2019-இன் விதி 83-இன் படி கட்டாயமான ‘புதிய மருந்துக்கான அனுமதி’யை, உற்பத்தி உரிமம் வழங்கப்படுவதற்கு முன்பாகவே உற்பத்தியாளர் சமர்ப்பித்திருப்பின், தயவுசெய்து அதன் நகல் ஒன்றை வழங்கவும். மேலும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை (ATR) கூடிய விரைவில் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். பொது சுகாதார நலன் கருதி, இந்த விஷயத்திற்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
Read More : அதிக EMI.. கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறீங்களா..? இந்த 3 விஷயங்களை செய்தால், பிரச்சனைகள் தீரும்..!


