விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக பொங்கலுக்கு வெளியாகவில்லை.. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு ஜன நாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தது.. இந்த நிலையில், சமீபத்தில் ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானது படக்குழு மற்றும் விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனினும் விஜய் தரப்பே ஜனநாயகன் படத்தை லீக் செய்திருக்கக் கூடும் என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் ஒருபுறம் நடந்து வருகிறது.. அதாவது, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஜனநாயகன் படம் விஜய்க்கு மிகப்பெரிய பிரச்சாரமாக அமையும்.. மேலும் ஜனநாயகன் படம் லீக் ஆனதால் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்ய விஜய் மீண்டும் நடிக்க வருவார் என்று கூறப்பட்டது..
இந்த சூழலில் ஜனநாயகன் படத்தால் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய விஜய் மேலும் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.. விஜய்யின் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ், அட்லி அல்லது நெல்சன் ஆகியோரில் ஒருவர் இயக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் விஜய்யின் அரசியல் ஆபத்தானது தொடர்ந்து கூறி வருகிறார்.. இந்த நிலையில் மீண்டும் படங்களில் நடிக்க ஜனநாயகன் படத்தை விஜய்யே திட்டமிட்டு வெளியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.. விஜய்யின் அரசியல் ஆலோசராக இருந்த நபர் இந்த தகவலை தனக்கு தெரிவித்ததாகவும் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்..
இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ விஜய்யின் அரசியல் ஆலோசகராக இருந்து அவரைப்பற்றிய எல்லாம் அறிந்த பிறகு வெளியேறிய ஒருவருடன் நேற்று பேசிக்கொண்டிருந்தேன். “முதல்வர் நாற்காலியில் அமரவேண்டும் என்கிற அதிகார வெறியில்தானங்க அவர் அரசியலுக்கே வந்தாரு. தன் வல்லமையை வெளிப்படுத்தவே அவர் அதிகாரத்தை விரும்புகிறான்.. (He just wants power to show his might.” உதயநிதியின்வளர்ச்சியைஅவரால்_தாங்கமுடியல.
போதாததுக்கு அங்க இங்க இருந்து கூட ஒட்டிக்கொண்ட எல்லாரும் அவருக்கு ஆசை வார்த்தை காட்ட, தான் அந்த இடத்தை சந்தேகமே இல்லாமல் எளிதாகப் பிடித்துவிடுவோம் என்று நினைத்து, அவர்கள் சொன்னதையெல்லாம் நம்பி களத்தில் இறங்கினார்.
“முதலில் ரொம்ப நம்பிக்கையாகத்தான் இருந்தார். போகப்போகத்தான் அவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விளங்க ஆரம்பித்தது. நிச்சயம் இது நடக்காது என்று தெரியத் தொடங்கும்போது, பல பித்தலாட்டங்களைச் செய்யத் தொடங்கினார்.”
“திமுகவால் தனக்குத் தொல்லை என்பது போல பொய்யாகப் பேசத் தொடங்கினார். அவருடைய ரசிகர்களும் அதை நம்பினார்கள். கூட இருக்கிற நரிகளின் ஆலோசனைப்படி ‘ஜனநாயகன்’ படத்தையும் leak செய்தார்.”
அவர் இறுதியாகச் சொன்னதுதான் நான் அவ்வளவாக ஏற்க முடியாமல் இருந்தது. அதைச் செய்வார் என்று நானும் நினைத்தேன்; ஆனால், அவ்வளவு விரைவாக அது நடக்காது என்று எனக்குள் நினைத்துக்கொண்டேன். பார்த்தால், தற்போது அது ‘தலைப்புச் செய்தி’ யாக வருகிறது.
அவர் இறுதியாகச் சொன்னது- “இந்தப் படத்தை இணையத்தில் வெளியிட்டதே இதற்குத்தான். படம் பொங்கலன்று வெளியாகி இருந்தால், அரசியல் களம் இருந்த நிலையில், பெரிய ஹிட்டாக ஆகியிருக்க வாய்ப்புண்டு. அது தடைபட்டு, இப்போது அரசியல் தோல்வியும் சேர்ந்துகொள்வதால், படம் வேறு மோசமாக இருப்பதால், படம் வெளியானால் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்; அந்த முதலீடு அப்படியே இழப்பாகிப் போகும், எல்லா திட்டமும் வீணாகிவிட்டதே என்று அடுத்த திட்டம் தயார்செய்து விட்டார்கள்”
“இந்தப் படம் இணையத்தில் வெளியாகி என் தயாரிப்பாளருக்கு பெரிய இழப்பு ஏற்பட்டு விட்டதால், அவருக்காக இன்னொரு படம் நடித்துத் தர திட்டமிடுகிறேன் என்று அறிவிப்பு வரும் பாருங்க. அதற்கான வேலைகளை உள்ளே தொடங்கிட்டார்கள்” என்றார்.
அரசியலுக்கு ஏற்றவர் இல்லையென நினைத்தேன்; திருத்திக் கொள்கிறேன்! தகிடுதத்தங்களுக்கும், பித்தலாட்டங்களுக்கும், மக்களை வசியப்படுத்தி பொய்யனாக வாழும் அரசியல்வாதியாக நடமாட எல்லாத் தகுதிகளும் உள்ளவர் என்பதை மனமார ஒத்துக்கொள்கிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : லோக்கல் சேனலில் ஒளிபரப்பான ஜனநாயகன் படம்..! பேரதிர்ச்சியில் படக்குழு..!



