மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து நீட்-யுஜி தேர்வை ரத்து செய்ததற்காக சனிக்கிழமையன்று அரசை கடுமையாக விமர்சித்தார். மேலும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், இவ்விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தேர்வு வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்கள் உடனடியாக சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் காந்தி கூறினார்.
தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நீட் வினாத்தாள் வாட்ஸ்அப்பில் கசிந்தது என்பது நாடு முழுவதற்கும் தெரியும்… உண்மை என்னவென்றால், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்தியாவின் அடித்தளத்தையே சேதப்படுத்தியுள்ளார்,” என்று குறிப்பிட்டுள்ளார்..
மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் காந்தி, இந்தியாவின் கல்வி முறை மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலம் பணம் சம்பாதிப்பதற்காக பாரதிய ஜனதா கட்சிக்கும் (பாஜக) அதன் சித்தாந்த வழிகாட்டியான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கும் (RSS) இடையே ஒரு தொடர்பு இருப்பதாக மேலும் குற்றம் சாட்டினார்.
பல்கலைக்கழகங்களில் பணம் சம்பாதிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ், பாஜக மற்றும் அவற்றுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு இடையே ஒரு கூட்டணி உள்ளது. அவர்கள் இந்தியாவின் ஒட்டுமொத்த கல்வி முறையையும் சேதப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாகவே இந்த நாட்டில் குறைந்தது 80 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளன. பிரதமர் உடனடியாக தர்மேந்திர பிரதானைப் பதவி நீக்கம் செய்து, இதில் சம்பந்தப்பட்டவர்களைச் சிறையில் அடைக்க வேண்டும்,” என்று காந்தி கூறினார்.
Read More : 9, 10 ஆம் வகுப்புகளுக்கு மும்மொழி கொள்கை கட்டாயம்.. ஜூலை 1 முதல் அமல்.. CBSE அறிவிப்பு..!


