பொது இடங்களில் நாய்களை அகற்றுவது தொடர்பான வழிகாட்டுதல்களைத் திரும்பப் பெறக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தனது முந்தைய உத்தரத்தைத் திருத்தக் கோரிய மனுவையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களிலிருந்து நாய்களை அகற்றுவது தொடர்பான உத்தரங்களில் மாற்றங்கள் செய்யக் கோரி, நாய் ஆர்வலர்கள் தாக்கல் செய்த மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
“விலங்கு நல வாரியத்தின் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் நாங்கள் தள்ளுபடி செய்கிறோம்,” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் நாய்க்கடிகளை புறக்கணிக்க முடியாது எனவும் குறிப்பிட்டது..
இதன் மூலம், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களிலிருந்து நாய்களை அகற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். “விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டுக்கான கட்டமைப்பைச் செயல்படுத்துவது, பல்வேறு அதிகார வரம்புகளிலும் பெரும்பாலும் சீரற்றதாகவும், போதிய நிதி ஒதுக்கீடு இன்றியும், முறைசாராமலும் உள்ளது,” என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற நிறுவன வளாகங்களிலிருந்து அனைத்துத் தெரு நாய்களையும் அகற்றுமாறு உத்தரவிட்ட தனது நவம்பர் 25-ஆம் தேதி உத்தரவைத் திருத்த உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அவ்வாறு அகற்றப்பட்ட தெரு நாய்களை மீண்டும் அந்தப் பகுதிகளிலேயே விடுவதற்குத் தடை விதிக்கும் உத்தரவும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
மாநில அரசுகள் ‘விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு விதிகளை’ முறையாகக் கடைப்பிடித்திருந்தால், இத்தகைய ஒரு சூழலே ஏற்பட்டிருக்காது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.



