இந்திய ரூபாய் நோட்டுகளே, இந்தியாவில் புழக்கத்தில் உள்ள முதன்மையான பண வடிவமாகும். இந்திய நாணயத் தாள்களை அச்சிடுதல், வெளியிடுதல் மற்றும் அவற்றின் புழக்கத்தைக் கண்காணித்தல் ஆகிய பொறுப்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஏற்றுள்ளது. தற்போது இந்தியாவில் புழக்கத்தில் உள்ள மிகவும் பொதுவான ரூபாய் நோட்டுகள் ரூ..10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 ஆகும். 2016-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, ரிசர்வ் வங்கி நாணயத் தாள்களில் பல புதிய வடிவமைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள போதிலும், ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு குறைந்தபாடில்லை. இதன் விளைவாக, நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் நாணயத் தாள்கள் தொடர்ந்து ஒரு முக்கியப் பங்கை வகித்து வருகின்றன.
இதனிடையே ரூபாய் நோட்டுகள் குறித்த தகவல்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது 700 ரூபாய் நோட்டுகள் தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அதாவது, 500 ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக 700 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிடப்போகிறது என்ற தகவல் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள அந்த 700 ரூபாய் நோட்டின் புகைப்படத்தின்படி, அதில் மகாத்மா காந்தியின் படம், அசோகச் சக்கரம், நாசா (NASA) சின்னம், இந்திய வரைபடம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இந்த 700 ரூபாய் நோட்டுகள் குறித்த தகவல்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, இந்த 700 ரூபாய் நோட்டுகள் எப்போது புழக்கத்திற்கு வரும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எனினும், ரிசர்வ் வங்கி உண்மையில் 700 ரூபாய் நோட்டுகளை வெளியிடுமா என்று கேட்டால், அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்பதே உண்மையாகும்.. மேலும், 700 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது சில்லறை வர்த்தகர்களுக்குப் பல சிக்கல்களை உருவாக்கும். எனவே, 700 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது குறித்துப் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், ரிசர்வ் வங்கி அத்தகைய அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.



