முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக கடந்த மாதம் 27-ம் தேதி டெல்லி சென்ற விஜய் பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார்.. தொடர்ந்து கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திப்பார் என்று கூறப்பட்ட நிலையில் சந்திக்காமலேயே தமிழ்நாடு திரும்பினார்..
இந்த நிலையில் 3 நாள் அரசு முறை பயணமாக முதல்வர் விஜய் 2-வது முறையாக டெல்லி சென்றுள்ளார்.. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய் டெல்லி சென்றுள்ளார்.. இன்று காலை தனி விமானம் மூலம் விஜய் டெல்லி சென்றார்.. டெல்லியில் தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற முதல்வர் விஜய் காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்..
இந்த நிலையில் முதல்வர் விஜய் டெல்லியில் குடியரசு தலைவர் தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.. முதல்வராக பதவியேற்ற பின் குடியரசு தலைவரை முதல்வர் விஜய் சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.. மேலும் குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனையும் விஜய் சந்தித்தார்..
இந்த பயணத்தில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே ஆகியோரையும் விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் முதல்வர் விஜய் வரும் 12-ம் தேதி வரை டெல்லியில் இருப்பார் எனவும், 12-ம் தேதி காலை மத்திய அமைச்சர்கள் சிலரையும் விஜய் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. அன்றைய தினம் டெல்லியில் இருந்து அவர் தமிழகம் வர உள்ளதாகவும் கூறப்படுகிறது..



