நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது… இதையடுத்து தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டார்.. மேலும் தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு 32 பேர் கொண்ட குழுவையும் அமைத்தார்.. இந்த குழு தமிழக முழுவதும் கள ஆய்வு செய்து தங்கள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்..
அதன்படி இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்ட நிலையில் இந்த குழுவில் ஒரு பிரிவினர் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தனர்..
இந்த நிலையில் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகின.. அதில் கூட்டுறவு சங்கம், ஆவின் உள்ளிட்ட தேர்தல்களை நடத்ததாதால் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது… மக்கள் குறைகளை அமைச்சர்களிடம் கொண்டு செல்ல உதவியாளர்களே முட்டுக்கட்டை என புகார் உள்ளது.. பல முறை காத்திருந்தும் அமைச்சர்களை பார்க்க முடியாமல் திரும்பி சென்றதாகவும் கட்சி நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர்..
களத்தில் திமுக அரசு – திமுக கட்சி என இரண்டாக பிரிந்து நின்றதாகவும் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. உள்ளாட்சி பிரதிநிதிகள் கேட்கும் திட்டங்களுக்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.. அதிகாரிகள் அவர்களாகவே திட்டங்களை முடிவு செய்ததாகவும் கள ஆய்வில் புகார் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.. கட்சியில் உள்ள இளைஞர்களின் சக்தியை முழுமையாக பயன்படுத்தவில்லை என அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..
தற்காலிக நியமன பொறுப்புகளில் கட்சியினருக்குமுன்னுரிமை வழங்கப்படவில்லை. கட்சி பொறுப்புகளில் இல்லாத மூத்த நிர்வாகிகளை கண்டுகொள்ளவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.. ஒப்பந்தங்கள் பெரும்பான்மையாக திமுகவினருக்கு ஒதுக்கப்படவில்லை என்றும் கள ஆய்வில் பலர் புகார் தெரிவித்தனர்..



