Breaking : ராஜினாமா செய்த 4 பேருக்கும் சபாநாயகர் நோட்டீஸ்..! 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்..!

admk mla

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்திருந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்..  மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்யபாமா, அம்பா சமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஆகிய 4 அதிமுக எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.. மேலும் ராஜினாமா செய்த கையோடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்..


இந்த நிலையில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த 4 பேருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.. உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.. பதவியை ராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏக்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை கோரி அதிமுக மனு அளித்த நிலையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.. 7 நாட்களில் விளக்கம் அளிக்க கூறி சபாநயாகர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது..

RUPA

Next Post

மாணவர்கள் கவனத்திற்கு.. நீட் மறுதேர்வு எழுத கூடுதல் நேரம், ரஃப் ஒர்க் செய்ய கூடுதல் இடம்.. NTA அறிவிப்பு..!

Fri Jun 12 , 2026
நீட் இளங்கலை மறுதேர்வு 2026 ஜூன் 21 அன்று நடைபெறவுள்ளது. மறுதேர்வுக்காக மாணவர்-நட்பு நடவடிக்கைகளை தேசிய தேர்வு முகமையான NTA அறிவித்துள்ளது. NTA-வின் அறிவிப்பின்படி, தேர்வர்கள் கூடுதல் 15 நிமிடங்களையும், குறிப்புகள் எழுத (rough work) கூடுதல் இடத்தையும் பெறுவார்கள். நீட் இளங்கலை மறுதேர்வு 2026: கூடுதல் நேரம்: மாணவர்களுக்குக் கூடுதல் 15 நிமிடங்கள் வழங்கப்படும்; மறுதேர்வுக்கான கால அளவு 195 நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது, இது மதியம் 2 மணி […]
neet 2026 paper leak

You May Like