திமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ இனி திமுக உடன் தோழமை நீடிப்பது சாத்தியமற்றது என்ற முடிவுக்கு மதிமுக வந்துள்ளது. திமுக ஆட்சியை பாராட்டி இருக்கிறேன்.. சிறு விமர்சனம் கூட வைத்தது இல்லை.
திமுகவின் ஆ. ராசா மதிமுகவை அவமதிக்கும் வகையில் பேசினார். எங்கள் கட்சியில் இருந்து வெளியேறிய நபர் என்னை அவதூறாக பேசி இருக்கிறார். திமுகவை விட்டு விலகிவிட்டோம்.. இடைத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் உள்ளாட்சி தேர்தலில் தவெகவுக்கு ஆதரவாக இருப்போம். அண்ணாவின் கொள்கையில் உறுதியாக இருக்கும் சமூக நீதியை பாதுகாக்கும் அரசாக தவெக அரசு செயல்படுகிறது.
முதல்வர் விஜய்யிடம் இருந்து நான் ரூ.50 கோடி வாங்கியதாக கூறுகிறார்கள்.. கட்சிக்காக சொத்துக்களை விற்றவன் நான், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சத்யாவை யார் மறைமுகமாக இயக்குகிறார்கள் என்பது தெரியும். ஜெயலலிதாவிடம் பணம் வாங்கினேன் என்றார்கள், உங்கள் நேர்மை பற்றி தெரியும் என்று ஐகோர்ட் நீதிபதியே கூறினார்.
எங்கள் எம்.எல்.ஏ. செந்தில் செல்வனை திமுகவில் சேர்த்தது குதிரை பேரமா? ஒட்டக பேரமா..? எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள், நானே வந்து பிரச்சாரம் செய்கிறே என முதல்வர் கூறியுள்ளார். ராஜினாமா செய்வது குதிரை பேரம் என சொல்ல முடியாது. மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
திமுக கூட்டணியில் 4 தொகுதிகள் தான் கொடுக்க முடியும். உதயசூரியன் சின்னம் என நிர்பந்தம் செய்தனர். தவெக தவறு செய்தால் சுட்டிக் காட்டுவோம். திருச்சி கிழக்கில் நான் போட்டியிடவில்லை. திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது..” என்று தெரிவித்தார்.



