கேஸ் அடுப்பா? இண்டக்‌ஷன் அடுப்பா? ஆரோக்கியத்திற்கு எது பாதுகாப்பு? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

blog induction vs gas stove cover 2

நம் வீட்டில் பயன்படுத்தும் சமையல் அடுப்பு கூட உடல்நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பலருக்குத் தெரியாது. குறிப்பாக, ஆஸ்துமா மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்களுக்கு கேஸ் அடுப்பில் சமைப்பதால் வீட்டுக்குள் காற்று மாசுபாடு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், கேஸ் அடுப்பிலிருந்து மின்சார இண்டக்‌ஷன் அடுப்புக்கு மாறியவர்களுக்கு சுவாசக் கோளாறுகளில் முன்னேற்றம் ஏற்பட்டதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.


வடகிழக்கு ஓஹியோவில் உள்ள ஒரு மருத்துவமனை மற்றும் கல்வி மருத்துவ மையம், சமூக அமைப்புகளுடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டது. இதில், ஆஸ்துமா முழுமையாக கட்டுப்பாட்டில் இல்லாத 85 பேர் பங்கேற்றனர். அவர்கள் பயன்படுத்திய கேஸ் அடுப்புகள், மின்சார இண்டக்‌ஷன் அடுப்புகளாக மாற்றப்பட்டன. அடுப்பு மாற்றுவதற்கு முன்பும், மாற்றிய சில மாதங்களுக்குப் பிறகும் பங்கேற்பாளர்களின் உடல்நிலை, சுவாச அறிகுறிகள் மற்றும் வீட்டு காற்றின் தரம் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின் முடிவில், கேஸ் அடுப்பிலிருந்து வெளியேறும் நைட்ரஜன் டை ஆக்சைடு என்ற காற்று மாசுபடுத்தும் வாயுவின் அளவு, இண்டக்‌ஷன் அடுப்புக்கு மாறிய பிறகு வீட்டுக்குள் சுமார் 70 சதவீதம் குறைந்திருந்தது தெரியவந்தது. இதனால், ஆஸ்துமா அறிகுறிகளும் கணிசமாக குறைந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வேலை அல்லது பள்ளிக்குச் செல்ல முடியாத நாட்களின் எண்ணிக்கையும் குறைந்ததுடன், அவசர சிகிச்சை பெற வேண்டிய நிலையும் குறைந்ததாக ஆய்வில் பதிவாகியுள்ளது.

புதிய இண்டக்‌ஷன் அடுப்பைப் பயன்படுத்திய பெரும்பாலானோர் அதில் திருப்தி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும், கேஸ் அடுப்பை மாற்றுவது மட்டுமே ஆஸ்துமாவுக்கு முழுமையான தீர்வு அல்ல என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். ஒவ்வொருவரின் உடல்நிலை, வயது மற்றும் வாழும் சூழலைப் பொறுத்து பாதிப்பு மாறுபடலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். உடனடியாக இண்டக்‌ஷன் அடுப்புக்கு மாற முடியாதவர்கள், சமையல் செய்யும் போது ஜன்னல்களை திறந்து வைத்து காற்றோட்டத்தை அதிகரிக்க வேண்டும். சமையலறை சிம்னி அல்லது எக்ஸாஸ்ட் விசிறியை பயன்படுத்துவதும் நல்லது. தேவையெனில் ஏர் பியூரிஃபையரையும் பயன்படுத்தலாம்.

இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வீட்டுக்குள் ஏற்படும் காற்று மாசுபாட்டை குறைத்து, சுவாச ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Also Read: இந்த ஒரு தண்ணியை தினமும் குடிங்க… நோய் எதிர்ப்பு சக்தி முதல் இதய ஆரோக்கியம் வரை ஏகப்பட்ட நன்மைகள்!

Saranya

Next Post

2 மாத குழந்தையை, 2-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய பாட்டி!! அதிர்ச்சியூட்டும் காரணம்!

Fri Jul 31 , 2026
குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடத்திலேயே கொடூரங்கள் அரங்கேறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கோபமும், குடும்பப் பிரச்சினைகளும் சிலரின் மனிதநேயத்தையே மறக்கச் செய்கின்றன. எந்த தவறும் செய்யாத பச்சிளம் குழந்தைகள் கூட இதுபோன்ற கொடூரங்களுக்கு பலியாகும் சம்பவங்கள் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் ஆந்திரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீ சத்ய சாயி மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் மற்றும் […]
1485135 baby g9d1b4616d1920 1

You May Like