கடன் வசூலிக்கும் ஏஜென்ட்டுகளுக்கு எச்சரிக்கை..!! RBI வெளியிட்ட புது ரூல்ஸ்..!! 1ம் தேதி முதல் அமல்..!!

Loan 2026

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களை திரும்பப் செலுத்துமாறு வலியுறுத்தும் போது, கடன் வசூல் முகவர்கள் (Recovery Agents) வரம்பு மீறிச் செயல்படுவதை தடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.


➣ கடன் வழங்கிய நிறுவனங்களோ அல்லது வசூல் முகவர்களோ வாடிக்கையாளர்களைக் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். இந்த நேரத்தை தாண்டி தொடர்பு கொள்ள வேண்டுமானால், அதற்கு வாடிக்கையாளரின் முன்அனுமதி அல்லது சிறப்பு வேண்டுகோள் அவசியமாகும்.

➣ வாடிக்கையாளரின் குடும்பத்தில் நிகழும் திருமணம், துக்க நிகழ்வுகள் அல்லது மருத்துவ அவசரச் சூழல்களின் போது அவர்களைத் தொடர்பு கொண்டு கடன் கேட்டு வற்புறுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

➣ கடன் வசூல் நடவடிக்கைகளின் போது வாடிக்கையாளர்களை அச்சுறுத்தும் வகையிலோ, அநாகரிகமாகவோ அல்லது மிரட்டும் தோனியிலோ பேசுவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

➣ கடன் நிலுவையைச் சுட்டிக்காட்டி வாடிக்கையாளரைப் பொதுவெளியில் நிறுத்தி அவமானப்படுத்துவதோ அல்லது அவரது குடும்பத்தினரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதோ கூடாது.

➣ வாடிக்கையாளரின் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களைச் சமூக வலைதளங்களில் பகிரக் கூடாது என நிதி நிறுவனங்களுக்கும் முகவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

➣ கடன் வாங்கியவர் குறிப்பிடும் இடத்திற்குச் சென்று தான் வசூல் முகவர்கள் அவரைச் சந்திக்க வேண்டும். குறிப்பிட்ட இடத்திற்கு வராமல் அவர் ஏமாற்றும் பட்சத்தில் மட்டுமே, அவரது இல்லத்திற்கோ அல்லது பணிபுரியும் இடத்திற்கோ செல்ல அனுமதி உண்டு.

➣ நேரடி வசூலுக்குச் செல்லும் முகவர்கள் தங்களது அதிகாரப்பூர்வ அடையாள அட்டை, வங்கியின் அங்கீகாரக் கடிதம் மற்றும் நோட்டீஸ் ஆகியவற்றைத் தவறாமல் கையில் வைத்திருக்க வேண்டும்.

➣ வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்ட தொலைபேசி எண்கள், அழைத்த நேரம் உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் வங்கிகள் குறைந்தது 6 மாதங்களுக்குப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்க வேண்டும்.

➣ கடன் தொகையில் ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது லேப்டாப் வாங்கித் தவணை கட்டத் தவறினால், அவற்றை உடனடியாக முடக்கக் கூடாது. தவணைத் தொகை செலுத்தப்படாமல் 60 நாட்கள் கடந்த பிறகே சாதனங்களை முடக்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

➣ நிலுவைத் தொகையை வாடிக்கையாளர் செலுத்திய அடுத்த 1 மணி நேரத்திற்குள் முடக்கப்பட்ட சாதனங்களை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். இதில் தாமதம் ஏற்படும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வாடிக்கையாளருக்கு ரூ. 250 இழப்பீடாக வழங்கப்பட வேண்டும்.

ரிசர்வ் வங்கியின் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளன.

Read More : “அவமானத்தை நான் தாங்கிக் கொள்கிறேன்”..!! உதயநிதிக்கு பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்..!!

You May Like