அடுத்த அதிரடி!. நீட் தேர்வுக்கு எதிராக இன்று பேரவையில் தீர்மானம்!.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராகவும், மத்திய அரசின் வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டத்திற்கு (FCRA) எதிராகவும் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க இரு முக்கியத் தீர்மானங்கள் கொண்டுவரப்படுகின்றன. இவற்றுடன் சேர்த்து, நடப்பு கூட்டத்தொடரின் முக்கிய அம்சங்களான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களும் இன்றைய பேரவைக் கூட்டத்தில் நடைபெறுகின்றன.


மருத்துவக் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உறுதியான நிலைப்பாட்டை எடுத்து வரும் நிலையில், நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வலியுறுத்தும் தீர்மானத்தைச் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று சட்டப்பேரவையில் கொண்டு வருகிறார். இந்தத் தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் உரையாற்றிய பிறகு, பேரவையில் இது நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, மத்திய அரசின் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, அமைச்சர் ராஜ்மோகன் மற்றொரு அரசுத் தீர்மானத்தைப் பேரவையில் தாக்கல் செய்கிறார். இத்தீர்மானங்களைத் தொடர்ந்து, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மாநிலத்தின் பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை மீதான விரிவான விவாதங்களும் இன்றைய சட்டமன்றக் கூட்டத்தில் நடைபெறவுள்ளன.

1newsnationuser5

Next Post

காவிரி நதிநீர் விவகாரம்!. டெல்லியில் நாளை அவசரமாக கூடுகிறது மேலாண்மை ஆணையம்!

Tue Aug 11 , 2026
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக விவாதிப்பதற்காக, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின்139-வது கூட்டம் நாளை காலை டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, எஸ்.கே. ஹல்தர் தலைமையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 55-வது அவசர கூட்டமும் நாளை பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிற்கான உரிய நீர்ப் பங்கீட்டின்படி, ஜூன், ஜூலை மற்றும் நடப்பு ஆகஸ்ட் ஆகிய மாதங்களுக்குச் சேர்த்து மொத்தம் 88 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக […]
cauvery water meeting

You May Like