தமிழகத்தில் ஆட்சியமைத்துள்ள புதிய அரசின் வருகைக்கு பிறகு, மாநில அரசியல் களம் பல்வேறு மாற்றங்களை கண்டு வருகிறது. அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் தவெகவில் இணைந்துள்ளனர். இதனிடையே, திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே எதிர்காலத்தில் கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் உலா வந்தன.
இது தொடர்பான கேள்விக்கு அண்மையில் பதிலளித்த திமுக எம்பி கனிமொழி சோமு, “அரசியலில் எதிரி, நண்பர் என்று யாருமே கிடையாது. தமிழகத்தின் நலனுக்கு எது நல்லதோ, அது எங்கிருந்து வந்தாலும் அதை நாங்கள் கண்டிப்பான முறையில் ஆமோதிப்போம், வரவேற்போம்” என குறிப்பிட்டார்.
அவரது இந்த கருத்து குறித்து பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை” என தெரிவித்தார். மேலும் திமுக – பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்களுக்குப் பதிலளித்த அவர், “அப்படி ஒரு கூட்டணி உருவாகும் போது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்; கூட்டணி அமைவதற்கு முன்பாகவே நீங்களாகவே ஒரு கூட்டணியை உருவாக்கி விடுவீர்கள் போலிருக்கிறது” என பதிலளித்தார்.
Read More : வீடு புகுந்து தாய், மகளை வெட்டி சாய்த்த காதலன்..! பல்லடத்தில் கொடூரம்..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!



