சூடுபிடிக்கும் கால்பந்து களம்!. பிரேசில் மோதலுக்கு முன் பனாமாவை எதிர்கொள்ளும் இந்திய அணி!

football Panama vs india 30kb

ஐந்து முறை உலக சாம்பியனான பிரேசிலுக்கு எதிரான பெரிதும் எதிர்பார்க்கப்படும் மோதலுக்கு முன்பு, இந்திய ஆண்கள் கால்பந்து அணி மற்றொரு முக்கியமான சர்வதேச போட்டியை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. பிஃபா சர்வதேச போட்டியின் போது செப்டம்பர் 26 அன்று பனாமா அணியை இந்தியா சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் என்று அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


பனாமா அணிக்கு எதிரான போட்டியின் மைதானம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை, மேலும் அது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். இந்த போட்டி இந்தியாவுக்கும் பனாமாவுக்கும் இடையிலான முதல் சந்திப்பாகும். மேலும், 2026 பிஃபா உலகக் கோப்பையில் விளையாடிய ஒரு அணிக்கு எதிராக விளையாட கலீத் ஜமீலின் அணிக்கு இது ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை வழங்குகிறது.

பனாமா தற்போது பிஃபா உலகத் தரவரிசையில் 44வது இடத்தில் உள்ளதுடன், இந்தியாவின் மூத்த ஆண்கள் சர்வதேச வரலாற்றில் கான்டாகாஃப் (CONCACAF) அமைப்பைச் சேர்ந்த 9வது வெவ்வேறு எதிரணியாக மாறவுள்ளது. 2026 உலகக் கோப்பையில் இடம்பெற்ற அணிகளுக்கு எதிரான தொடர்ச்சியான போட்டிகளில் இந்தியா களமிறங்குவதால் இந்தப் போட்டி மிகவும் முக்கியமானதாகும். ‘புளூ டைகர்ஸ்’ அணி வரிசையாக எதிர்கொள்ளவுள்ள அத்தகைய நான்கு ஆட்டங்களில் பனாமாவுக்கு எதிரான சவால் முதலாவதாகும். இதில் கொல்கத்தாவில் பிரேசிலுக்கு எதிரான போட்டி மிகப் பெரியதாக இருக்கப் போகிறது.

பனாமாவுக்கு எதிரான போட்டி, உயர் தரமான எதிரணிகளுக்கு எதிராக அரிதாகவே கிடைக்கும் அனுபவத்தை இந்திய வீரர்களுக்கு வழங்கும் என்று ஏஐஎஃப்எஃப் துணைப் பொதுச் செயலாளர் எம். சத்யநாராயணன் நம்புகிறார். “பிரேசில் போட்டிக்கு முன்னதாக பனாமாவுக்கு எதிரான ஆட்டம் கடினமான போராக இருக்கும். பனாமா உலகின் முதல் 50 இடங்களுக்குள் இருக்கும் ஒரு அணி, மேலும் இது கலீத் ஜமீலின் வீரர்களுக்கு ஒரு நல்ல பரிசோதனையாக இருக்கும். எங்கள் வீரர்கள் சரியான அனுபவத்தைப் பெறுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், மேலும் இத்தகைய உலகக் கோப்பை அணிகளுடன் நாங்கள் வழக்கமாக விளையாடுவது கிடையாது. எனவே இது போன்ற கடினமான அணிகளுடன் நாம் விளையாடும் ஒரு நல்ல பிஃபா சாளரமாகும் இது” என்று தெரிவித்தார்.

அக்டோபர் 3 அன்று கொல்கத்தாவில் பிரேசில் அணி பங்கேற்பது இந்தியாவின் அடுத்த பெரும் ஈர்ப்பாக இருக்கப் போகிறது. இந்தப் போட்டி விவேகானந்தா யுவ பாரதி கிரீங்கன் மைதானத்தில் (Vivekananda Yuba Bharati Krirangan) நடைபெறும். இது மூத்த ஆண்கள் சர்வதேச கால்பந்தில் இந்தியாவுக்கும் பிரேசிலுக்கும் இடையிலான முதல் சந்திப்பாகும். இந்தப் போட்டி காகித அளவில் மிகப்பெரிய சோதனையாகவும் பார்க்கப்படுகிறது. பிரேசில் தற்போது பிஃபா உலகத் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 1992 ஆம் ஆண்டு பிஃபா உலகத் தரவரிசை முறை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்தியா எதிர்கொள்ளும் மிக உயர்ந்த தரவரிசை கொண்ட எதிரணி இதுவாகும். எனவே, கலீத் ஜமீலுக்கும் அவரது வீரர்களுக்கும் உலகக் கால்பங்கின் மிகப்பெரிய பெயர்களில் ஒன்றை எதிர்கொள்வதற்கு முன்பு பனாமா போட்டி ஒரு முக்கியமான போட்டி அனுபவத்தை வழங்குகிறது.

ஆஸ்திரேலியாவில் இரண்டு நட்புமுறைப் போட்டிகளில் விளையாடிய பிறகு பிரேசில் இந்தியாவுக்கு வரும். ஐந்து முறை உலக சாம்பியனான அந்த அணி செப்டம்பர் 25 அன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 29 அன்று பிரிஸ்பேனில் (Brisbane) மற்றொரு நட்புமுறைப் போட்டியில் விளையாடுகிறது. பின்னர் அவர்கள் அக்டோபர் 3 அன்று கோல்கட்டாவில் நடைபெறும் போட்டிக்காக இந்தியா வருவார்கள். இது இந்திய கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய சர்வதேச நிகழ்வாக அமையும் என்ற எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

நவம்பர் மாதத்திலும் இந்தியாவின் சர்வதேச அட்டவணை தொடரும். நவம்பர் 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நியூசிலாந்து அணியை ‘புளூ டைகர்ஸ்’ இரண்டு முறை எதிர்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. பனாமா, பிரேசில் மற்றும் நியூசிலாந்து ஆகிய அனைத்து அணிகளும் 2026 பிஃபா உலகக் கோப்பையில் இடம்பெற்றவை என்பதால், வரவிருக்கும் பிஃபா சாளரங்களில் உலகக் கோப்பை எதிரணிகளுக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா களமிறங்குகிறது. தலைமைப் பயிற்சியாளர் கலீத் ஜமீலின் கீழ் தொடர்ந்து தயாரிப்புகளை மேற்கொண்டு வரும் இந்திய அணி, தங்களை விட உயர்ந்த தரவரிசை மற்றும் அதிக அனுபவம் வாய்ந்த சர்வதேச அணிகளுக்கு எதிராக தனது முன்னேக்கத்தை அளவிட இந்தத் தொடர் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

1newsnationuser5

Next Post

நெல், பருத்திக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிக்கு முழுத் தடை!. மத்திய அரசு பரிந்துரை!.

Wed Aug 26 , 2026
மனிதர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளைத் தடுத்தல் மற்றும் பூச்சிக்கொல்லியின் தொடர்ச்சியான பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் ஆபத்துகளைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு நெல், பருத்தி மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லியான கார்போசல்ஃபான் (Carbosulfan) மீது மத்திய அரசு முழுமையான தடையைப் பரிந்துரைத்துள்ளது. இதன் நச்சுத்தன்மை மற்றும் மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துகள் குறித்த கவலைகளைச் சுட்டிக்காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேளாண்மை […]
Carbosulfan insecticide ban 30kb

You May Like